தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, ஜூன் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை […]

நம்மைச் சுற்றி எங்கும் இருக்கும் இயற்கையின் அற்புதமான சக்தி காற்று. அதனை நாம் கண்ணால் பார்க்கமுடியாது. ஆனால், அதன் தாக்கத்தை நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் உணரமுடியும். மரங்களை அசைப்பதுமுதல், கடல்களில் அலைகளை உருவாக்குவது வரை காற்று அனைத்திலும் உள்ளது. இது சுவாசத்திற்கு அவசியமான ஆக்ஸிஜனை நமக்கு வழங்குகிறது. மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது. புவி வெப்பமயமாதலைக் குறைக்கிறது. காற்றாலை ஆற்றல் மற்றும் அதன் பல்வேறு பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த […]

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 70 காலியிடங்களையும், உதவி வனப்பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 44 தேர்வு மையங்களில் 2,49,296 பேர் எழுதுகின்றனர். தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என […]

ஈரான்-இஸ்ரேல் போரில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் 02 F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியுள்ளது. இஸ்ரேலிய பெண் விமானியை சிறைபிடித்ததாக ஈரானின் அரசு ஊடகங்கள் கூட கூறியுள்ளன. இந்த அறிக்கைகளை இஸ்ரேல் முற்றிலுமாக நிராகரித்திருக்கலாம், ஆனால் சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் போரைப் போலவே, மத்திய கிழக்கில் தகவல் (பிரச்சார) போர் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதாகத் தெரிகிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, ​​பாகிஸ்தான் இராணுவம் ஆறு […]

குஜராத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையானது 270 ஆக அதிகரித்துள்ளதாகவும், டிஎன்ஏ சோதனையில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகமதாபாத் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 788 ட்ரீம் லைனர் விமானம் 30 விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் […]