உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அவுரியாவில் உள்ள ஒரு வயல் வெளியில் 17 வயது சிறுமியின் உடல் ஒன்று நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடலைக் கைப்பற்றி, காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், ”தனது மகள் […]
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கல்வித்துறையில் அனுமதி பெற்று, சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12ஆம் தேதி வரையும், அரசுப் பள்ளிகளின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 9ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
பிரபல நடிகை அனன்யா சோனி, தான் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுவதாக கூறி, ரசிகர்கள் தனக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். பிரபல ஹிந்தி நடிகையான அனன்யா சோனி, சிறுநீரக செயலிழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு அவர் வெளியிட்ட வீடியோவில் தனது சிகிச்சைக்கு ரசிகர்கள் பண உதவி செய்யுமாறு கோரியிருந்தார். இந்நிலையில், நேற்றைய அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், என் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். நான் டயாலிசிஸ் செய்ய வேண்டும். மிகவும் […]
அண்ணியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த வடமாநில வாலிபர், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் – பாகலூர் செல்லும் சாலையில் உள்ள உலியாளம் கிராமத்தில் தனியார் லேஅவுட்டில் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பீகாரைச் சேர்ந்த சிவிஜிகுமார் (22), பங்காஜூ பஸ்வான் (25) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரையும் ஒப்பந்த பணியாளர்களாக தொளுவபெட்டாவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜெயக்குமார் (27) […]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, டி20 உலகப் கோப்பையில் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்.16ஆம் தேதி துவங்கி நவ.13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியா செல்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன், […]
தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரையிடப்படுகிறது. ’விக்ரம்’ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதுவரை தமிழ் திரைத்துறையின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து […]
இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட தகராறில், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆதனூர் மணல் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது வீட்டின் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணம் வசூல் செய்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக சக்திவேல் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த சமயம் எதிர்பாராத […]
உங்கள் ஸ்மார்ட்போனின் இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால், வேகத்தை அதிகரிக்கப்பதற்கான எளிய முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் அன்றைய பொழுதை கடப்பது மிகவும் கஷ்டமான ஒன்றுதான். இப்படியான சூழ்நிலையில், இன்டர்நெட் மெதுவாக அல்லது விட்டுவிட்டு இயங்கினால், அது நம்மை எரிச்சலடைய செய்யும். ஒரு சில நேரங்களில் உங்களுக்கும் இப்படியான சூழல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. இதனை தவிர்க்க நீங்கள் ஸ்மார்ட் ட்ரிக்ஸ் […]
வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மாமல்லபுரம், தாஜ்மஹாலைத் தோற்கடித்துள்ளது. 2021-22ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 65.41% பங்களிப்பைக் கொண்டுள்ளன என்றும் சுற்றுலா அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக வகைப்படுத்தப்பட்ட மாமல்லபுரம், வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் தாஜ்மஹாலைத் தோற்கடித்துள்ளது. இந்திய சுற்றுலாப் புள்ளிவிவரம் 2022 அறிக்கையின்படி, ”2021-22ஆம் ஆண்டில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்திற்கு […]
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் அதை பராமரிக்க முடியாத சூழலில், அதை முடிக்க நினைக்கும்போது, பின்பற்ற வேண்டிய வழிகளை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய சூழலில் வர்த்தகம் செய்வோர், தொழில்செய்வோர், உயரிய பணியில் இருப்போர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது இயல்பு. ஆனால், அந்த கணக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்புத் தொகை, அடிக்கடி பரிமாற்றம், இஎம்ஐக்கு இணைத்திருந்தால், அதில் முறையாக பணம் […]