ஒரு மனிதனின் வாழ்நாள் முடிவதற்கு இருதய நோய் ஒரு முக்கியமான காரணம். இது அனைத்து வயதினரையும் தாக்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட வயதுடையவர்களை அதிக அளவில் தாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவான நோய் வகைகளில் கரோனரி தமனி நோய், உயர் இரத்த அழுத்தம், இதயத் தடுப்பு, இதய செயலிழப்பு, அரித்மியா, புற தமனி நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை அடங்கும். நவீன காலகட்டத்தில் பரபரப்பான  வாழ்க்கையுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை தேர்வுகள்  […]

பெரும்பாலான இந்திய வீடுகளில் தயிர் முக்கிய உணவாகும். பாக்டீரியா நொதித்தல் லாக்டிக் அமிலத்தை உருவாக்குகிறது, இது தயிர் ஒரு தடிமனான அமைப்பை அளிக்கிறது. கிரீம், சுவையான தயிர் அல்லது தயிர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதால், உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தயிர் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. தயிரில் உள்ள புரோபயாடிக் […]

வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 20ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல எவ்வளவு மழை பெய்யுமோ அந்த அளவிற்கு இயல்பான அளவில் மழை பெய்யும் . பருவமழை காலத்தில் இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை […]

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களால் ஏராளமானோர் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து விளையாடத் தொடங்குகின்றனர். இதனால் விளையாட்டுக்கு அவர்கள் அடிமையாகின்றனர். ஒரு வேளை அதில் தோல்வியடைந்தால் ஏற்றுக் கொண்டு வெளியேற விரும்புவதில்லை. குறிப்பிட்ட சூதாட்ட செயலிக்கு தங்களை முழு அடிமையாக்கிக் கொள்கின்றனர். இதனால் ஏராளமானோர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியை நாடுகின்றனர். சிலர் […]

நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மாணவிக்கு உண்மையான விடைத்தாளை காண்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்மா விக்டோரிய என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த ஜுலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் ஜூலை 31ம் தேதி வெளியானது. அதில் அந்த மாணவி 196/720 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் […]

 டி20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் யூசூஃப் பதானை ஜான்சன் தாக்க முயன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தலத்தில் வைரலாகி வருகின்றது. லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி ஜோத்பூரில் நடைபெற்றது. இத்தொடரில் பில்வாரா கிங்ஸ் , இந்தியா கேபிடல்ஸ் இடையே தகுதித் தேர்வு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது யூசூஃப் பதானுக்கும் மிட்சல் ஜான்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கடுஞ் சொற்களால் சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. […]

மும்பை விமான நிலையத்திற்கு வந்த கரீனா கபூர் மீது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க கை வைக்க வந்ததால் கரீனா ஷாக்கானார். வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு பாலிவுட் பிரபல நடிகை கரீனா கபூர் வந்திருந்தார். அப்போது அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தில் ஒரு ரசிகர் அவர் தோளில் கை வைத்து செல்பி எடுக்க நினைத்திருந்ததாக தெரிகின்றது. இதற்காக நெருங்கி வந்து தோளில் […]

மிகக் குறைந்த விலையில் ஜியோ லேப்டாப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜியோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் 4 ஜி ஜியோ ஸ்மார்ட் போன் வெளியிட்டது. இதுமிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனிடையே அடுத்த திட்டமாக ரூ.15000 மதிப்பில் பிரத்யேக ஜியோ ஓ.எஸ்.உடன் மடிக்கணினி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜி யோ நிறுவனம் உலக நிறுவனங்களான குவால்காம் மைக்ரோசாப்ட் போன்ற […]

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் 3வது நாளில் ரூ.200 கோடி வசூலை குவித்துள்ளது. இதை எதிர்பார்த்திரா வெற்றி என  பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த பாகத்தின் வெளியீடு எப்போது என்பது பற்றிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். வசூலில் சாதனை படைத்த பாகுபலி , கே.ஜி.எப். […]

சென்னையில் பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த தாயையும் அவரது இரண்டாவது கணவரையும் போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் பானு (28), இவருக்கும் வில்ராஜ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விமல்ராஜும் பானுவும் பிரிந்தனர். தற்போது இரண்டாவது கணவர் ஜெகன் என்பவருடன் வாழ்ந்து வருகின்றார். […]