செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் வசிப்பவர் சந்திரா சுப்பிரமணி (72). சந்திராவின் கணவர், கடந்த சில வருங்களுக்கு முன்பு வயது முதிர்வால் இறந்து விட்டார். இதனால் சந்திரா தனது மகன் வடிவேலுவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மூதாட்டி சந்திரா சிங்கப்பெருமாள் கோவில் இருக்கும் பகுதிக்கு சென்று இருக்கிறார். போவதற்கு முன் தனது மகனிடம் சொல்லி சென்றுள்ளார். இதை தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் தாய் வீடு […]
அமைதியாக இருந்த புதுச்சேரி மாநிலத்தை, பாரதிய ஜனதா கட்சியினர் கலவர பூமியாக மாற்றி வருவதாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இருக்கும் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, காவல் துறை அனுமதி வாங்கி மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்த்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அந்தப் போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் புகுந்து தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது […]
சென்னையில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 70 வயது பாட்டியை பேரனே சுத்தியால் அடித்துக் கொன்ற பயங்கரம் நடந்துள்ளது. சென்னை கொருக்குபேட்டையில் கருமாரியம்மன் நகரில் தனியாக வசித்து வந்தவர் விசாலாட்சி (70) . இவரது மகள் அமுதா. அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகின்றார். அமுதாவின் மகன் சதீஷ்.. சில நாட்களுக்கு முன்பு அமுதாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் விசாலாட்சி கொடுத்துள்ளார். அதை திருப்பித்தரவேண்டும் என்று […]
சீனாவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயரதிகாரியான ஃபுஸெங்குவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஜிலின் மாகாணத்துக்கு உள்பட்ட ஜாங்சூன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. ஃபு பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரி, பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்ட […]
சமூக வலைதளங்களில் தற்போது யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம் என்ற நிலை உள்ளது. இதனால் பலர் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் அரசுக்கு எதிராக மற்றும் நாட்டை சீர்குலைக்கும் வகையில் சர்ச்சை உண்டாக்கும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் பல பிரச்சினைகள் உண்டாகிறது. மேலும் பார்வையாளர்களை அதிகரிக்க போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பமும் உண்டாகிறது. இந்த […]
பஞ்சாப் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பல் பிடுங்கச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அதிகப்படியான மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கணவருடன் வசித்து வந்தவர் ஸ்ரீமதி (30). இவர் கடுமையான பல் வலி காரணமாக அங்குள்ள பஞ்சாப் மருத்துவமனை மற்றும் மருத்து பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் பல்லை பிடுங்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்கள். இதற்காக அந்த பெண் காலை […]
தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]
சேலம் கோட்டை பகுதியில் குடியிருப்பவர் உசேன். இவர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களுக்கு சாவி செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவர் கடந்த 18-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை புதிய பேருந்து நிலையம் அருகே ரோட்டோரம் நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் கானாமல் போய் இருந்தது. இது குறித்து அவர் பள்ளப்பட்டி […]
திருப்பதியில் சினிமாவில் நடப்பது போல தன் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு ஆசைக்கணவனை முன்னாள் காதலிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. நெல்லூர் மாவட்டம் டக்கிலியில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த விமலா என்ற பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தலத்தில் அறிமுகமாகிக் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . இவருக்கு திருமணத்திற்கு முன்பே விசாகபட்டிணத்தைச் சேர்ந்த டிக்டாக் பிரபலமான […]
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 15 வயது சிறுமியை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும் அந்த சிறுமியை நிர்வாணமாக சாலையில் இரண்டு கிலோமீட்டர் நடக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் கழித்து வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், சிறுமி நிர்வாணமாக சாலையில் நடக்கும் காட்சி இருக்ஙிறது. சிறுமி ரத்தம் கொட்ட, சாலையில் நிர்வாணமாக சுமார் […]