நம் அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானது உணவு. ஏனெனில், உணவுதான் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பசி எடுக்கும் போது சாப்பிடுங்கனு சொல்வாங்க ஆனா, எப்பவுமே பசிக்கிறமாதிரியான உணர்வு வருவது ஆபத்துதான்… ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு பல நன்மைகளை தருகின்றது.நாம் உணவுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறோம். நாம் பிறந்த நாள் முதல் உணவால்தான் வளர்க்கப்படுகிறோம். இது நம் உடலின் செயல்பாட்டிற்கு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும் என்ற […]
வீட்டில் தயாரிக்கும் ஜுஸ் இரத்த ஓட்டத்தில் அதிகப்படியான யூரிக் அமிலம் இருப்பது ஹைப்பர்யூரிசிமியா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். இது சிறுநீரக கற்களை உருவாக்கலாம் மற்றும் கீல்வாதத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இயற்கையாகவே உடலைக் குணப்படுத்தவும், யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யவும் சிறந்த வழி உங்கள் உணவை மாற்றுவதன் மூலம் செய்ய முடியும். இயற்கையாகவே உடலில் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் சில எளிமையான முறையில் வீட்டில் தயாரிக்கும் […]
திருப்பதி அருகே பென்ஸ் காருடன் டிராக்டர் மோதிய விபத்தில் டிராக்டர் இரண்டு ’பீஸ்’ ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பைபாஸ் சாலையில்இந்த விபத்து ஏற்பட்டது. மேஸ்ஸி ஃபெர்குசன் நிறுவனத்தின் டிராக்டரும் பென்ஸ் காரும் மோதி விபத்திற்குள்ளாது. இந்த விபத்தில் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை என்ற போதிலும் டிராக்டர் ஓட்டுனர் லோசான காயங்களுடன் உயிர்தப்பினர். டிராக்டரும் – பென்ஸும் மோதிக்கொண்ட வேகத்தில் டிராக்டர் இரண்டு துண்டானது.. […]
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தை போல மதுரையில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் 60 பெண்கள் குளித்ததை ஆண் நண்பருக்கு அனுப்பியதாக புகார் எழுந்ததை அடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதே போல மதுரையில் இளம் பெண் ஒருவர் தனியார் தங்கும் விடுதியில் பிற பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பி வந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் […]
ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாயை சாமர்த்தியமாக மற்றொரு நாயை சாமர்த்தியமாக காப்பாற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. ஒருவர்மரக்கட்டையை தூக்கி ஆற்றில் வீசியதும் மரக்கட்டையை பிடிக்க விழுந்த நாய் மரக்கட்டையை வாயில் கவ்விக்கொண்டு நீந்த முடியாமல் தவிக்கின்றது. பின்னர் முயற்சித்து தான் கவ்விய மரக்கட்டையை கரையில் நின்றிருந்த நாய்க்கு கவ்வ சிறு இடம் கொடுத்தவுடன் அந்த மரக்கட்டையை வாயால்கவ்வி எடுத்து கரைக்கு மீட்கின்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. வாயில் கவ்விக் […]
பொதுவாகவே அனைத்து நிறுவனங்களில் ரெஸ்யூம் (Resume) அடிப்படையில் தான் நேர்காணலுக்கு அழைப்பார்கள். அதனால் பலரும் தங்களது Resume-ஐ வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் ஒரு பெண், தான் யார் என்பதை நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துவதற்காக கேக்கில் Resume-ஐ தயார் செய்து அனுப்பியிருக்கிறார். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் (Karly Pavlinac Blackburn). இந்த பெண் நைக் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக […]
அரியலூர் மாவட்டம், ஓரியூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவரது மகன் முருகானந்தம் (37). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர் ஒருவரிடம் செல்போன் திருடியதாக இன்று காலை 6 மணியளவில் சமயபுரம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளிகள் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவரை சமயபுரம் காவல் நிலையத்தில் உள்ள விசாரணை கைதி அறையில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக […]
அதிமுக-வில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஒரு கடைசி ஆயுதம் இருப்பதாகவும் தேவைப்படும்பட்சத்தில் அந்த பிரம்மாஸ்திரத்தை ஓ.பி.எஸ். எய்வார் என்று பேசப்படுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியை வழிநடத்தி வந்தனர். திமுகவில் ஒற்றை தலைமை பற்றி பேச்சு எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு இருவருமே தங்களது ஆதரவாளர்களுடன் […]
இயக்குநர் மாரி செல்வராஜ் ஓடிடி தளத்திற்காக புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு […]
`கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை’ என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் இன்று […]