வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் இன்று அறிமுகம் செய்ய உள்ளார். வருவாய்த்துறையானது மாநிலத்தின் சீரான சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு […]
சமீபகாலமாகவே மனிதர்கள் இறப்புக்கு இதய நோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் பேர்மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இருப்பினும், மாரடைப்பு போன்ற இருதய நிலைகள் மிகவும் பொதுவானவை. குறிப்பாக வயதானவர்களில், அறிகுறிகள் பெரும்பாலும் தவறாகக் கண்டறியப்படுகின்றன அல்லது கவனிக்கப்படுவதில்லை. நீங்கள் மதிய உணவிற்கு சாப்பிட்ட ஒரு பெரிய உணவில் உங்கள் மார்பு அசௌகரியத்தை நீங்கள் குற்றம் சாட்டலாம் அல்லது அதை அலட்சியப்படுத்தலாம். […]
இது குறித்து முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பெருமாள்சாமி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில்; தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கல்வித்துறை அறிவித்தது. இந்தப் பணியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் இதுவரை 2,000ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் […]
அரசுப்பள்ளிகளில் 6-ம் முதல் 9-ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு உதவிபெறும் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் முதல்முறையாக 6-ம் […]
உங்களுக்கு மூட்டு வலி அடிக்கடி வர்ரதுக்கு காரணம் உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகம் சுரப்பதுதான். மூட்டு வலி, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இந்த அமிலத்தால் ஏற்படும்விளைவுதான். ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் யூரிக் அமிலத்தை உயர்த்தும் உணவுகளை உண்பது. இப்படிப்பட்ட உணவை உண்பதால் உடல் பருமன், சர்க்கரை நோய்போன்றவை ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் பலர் மோசமான வாழ்க்கை முறை […]
சென்னை நுங்கம்பாகத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஐ.டி. பெண் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில்அடைக்கப்பட்ட அந்த இளைஞர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ராம் குமார் உயிரிழப்பில் […]
கேரளாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன் வாழ்நாளில் எவ்வளவு பணம் செலவு பண்ணியிருக்காருன்னு தெரிஞ்சுகிட்டீங்கனா நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க… கேரளாவைச் சேர்ந்த சதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர் ராகவன்(70). இவருக்கு லாட்டரி மீது மோகம் அதிகம் . இதனால் எப்பயாவது நமக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்பி அடிக்கடி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவார். ஆனால் அதிர்ஷ்டமே அடித்ததில்லை . தனது 18 வயதில் இருந்து 1970ல் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி […]
சர்வதேச சினிமா தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் அறிவித்த அந்த அறிவிப்பு செல்லாது என தெரிவித்து ஏமாற்ற்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 23 திரையரங்கு டிக்கெட்டின் விலை ரூ.75 என மல்டிபிளக்ஸ் அசோசியேசன் கடந்த இரு வாரம் முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மாநில அரசாங்கத்தின் விதிமுறைகளால் தற்போது இந்த சினிமா தினம் தமிழகத்திற்கு செல்லாது என மல்டிபிளக்ஸ் அசோசியேசன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த […]
இயக்குனர் அட்லீ பிறந்த நாளுக்கு விஜய் மற்றும் ஷாரூக்கான் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தை அட்லீ டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஒரே நேரத்தில் ஷாரூக்கான், விஜய்யை பார்த்த உற்சாகத்தில் 3 பேருமே கருப்பு நிறத்தில் உடையில் எடுத்துக் கொண்ட போட்டோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகின்றது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் […]
திருமணத்திற்கு வரன் தேடுவது மிகவும் சிரமமான காரியம் என்றால் அதில் ஒரு விளம்பரத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் தொடர்புகொள்ள வேண்டாம் என இருந்தது , என்னடா இது சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு வந்த சோதனை என்பது போல இருந்தது. பொதுவாக வரன் தேடுபவர்கள் என்ன நிறத்தில் இருக்க வேண்டும், பெண்ணுக்கு சமமானவரா , என்ன உயரத்தில் மாப்பிள்ளை இருக்க வேண்டும், தாய் தந்தை மற்றும் குடும்பத்தின் பின்னணி , எப்படிப்பட்டவர் என்பது போன்ற […]