தமிழ்நாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக காலி பாட்டில் வாங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு விற்பனைக் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கண்மூடித்தனமாக கொட்டுவது மற்றும் காலி பாட்டில்களை உடைப்பது போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், […]
பீகாரில் மனைவி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததை கண்டுபிடித்த கணவன் எடுத்த முடிவு பேசுபொருளாக மாறியுள்ளது. பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, அப்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் […]
செயலிழந்த பான் கார்டு கொண்டுள்ள பயனாளர்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதியுடன் அந்த […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இருவரும், ஒரே நேரத்தில் தயாளு அம்மாளை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் இன்று தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு கோபாலபுரம் வீடு அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை முதலே உறவினர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தயாளு அம்மாளின் மகன் முக.தமிழரசன், பேரன் அருள்நிதி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் […]
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு 2007இல் கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். அதோடு இவர் முதல் படத்திலேயே மக்கள் மனதில் பிரபலமானார் என்று சொல்லலாம். அதன்பிறகு, அங்காடி தெரு என்ற […]
எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்துவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடு என மாஸ் காட்டி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு எதிராக கட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே சசிகலாவும், அதிமுகவை ஒன்றிணைப்பதாக கூறி வருகிறார். இந்நிலையில், மீண்டும் தனது சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்க உள்ளார். இது தொடர்பான […]
பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளன. பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவரஅட்டவணையில் உள்ள 20 இனங்களுக்கான […]
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்’ என்று 2021 தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது. ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் […]
புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது, சீமான் தமிழ் தேசியக் கொள்கையை விடுத்தால் பாஜக கூட்டணிக்கு நாங்கள் அவரை வரவேற்போம் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், எச்.ராஜா எத்தனை முறை அழைத்தாலும் வாய்ப்பில்லை ராஜா என்பதுதான் எனது பதில், நட்பு என்பது வேறு அரசியல் நிலைப்பாடு என்பது வேறு, அவர் […]
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது. 13 மொழிகளில் நடைபெற்ற இந்த தேர்வை நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் இந்த கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதியன்று வெளியானது. இதில் 11,45,976 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 78,691 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் […]