வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம் (Bath House) ஒன்றில் வாடகை அப்பா என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. ‘Rent a Dad’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்வார்கள். அதாவது, தாய் குளிக்கும் வரை இந்த குழந்தைகளை வாடகை தந்தைகள் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அந்த குழந்தைகளுக்கு உடை […]

ஐரோப்பாவில் உள்ள லித்துவேனியாவில் முதல் ஓட்டுநர் இல்லாத தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ வாகனங்களை எஸ்டோனிய தானியங்கி வாகன உற்பத்தியாளரான கிளெவோன் (Clevon), லிதுவேனியாவின் முன்னணி டெலிவரி டிரான்ஸ்போர்ட் பிளாட்பார்ம் லாஸ்ட்மைல் (LastMile) மற்றும் மிகப்பெரிய சூப்பர்மார்கெட் கிளைகளை உடைய ஐகேஐ (IKI) உடன் இணைந்து பயன்பாட்டிற்காக கொண்டுவந்துள்ளது. இதில் முதற்கட்டமாக, லாஸ்ட்மைல் மூலம் இயக்கப்படும் மூன்று ரோபோ வாகனங்கள் வில்னியஸ் நகர மையப் பகுதியில் […]

ராஜஸ்தானில் உள்ள சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்கம் லட்சக்கணக்கான மக்களின் வருமானத்தை மோசடி செய்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூடி வந்தனர். சமம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோரை 900 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் தொடர்புப்படுத்தி ராஜஸ்தான் […]

உலகக்கோப்பை 2023 தொடரில் விளையாடும் பத்தாவது அணியாக நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் மீதமுள்ள 2 அணிகளுக்காக ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளின் அடிப்படையில் நெதர்லாந்து அணி இறுதி அணியாக தகுதி பெற்றுள்ளது. தகுதிச்சுற்று போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் […]

அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி விரைந்து இசைவாணை வழங்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்”முன்னாள்‌ அதிமுக அமைச்சர்கள்‌ மீது உள்ள ஊழல்‌ வழக்குகளில்‌ நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து அனுப்புமாறும்‌, மாநில அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில்‌ ஒப்புதல்‌ அளிக்குமாறும்‌ தமிழ்நாடு ஆளுநர்‌ அவர்களுக்கு 3.7.2023 அன்று […]

உலக சாக்லேட் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சாக்லேட் தொடர்பாக அறியப்படாத தகவல்களை இங்கே பகிர்கிறோம். எழுத்தாளர் ஜேன் சீப்ரூக் உருவாக்கிய ஃபர்ரி லாஜிக் தொடரில் இப்படியாக ஒரு வரி வரும், “சொர்க்கத்தில் சாக்லேட் இல்லையென்றால் நான் அங்கு செல்லமாட்டேன்” என்று. ஆம், இங்கு சாக்லேட் சுவையை விரும்பாமல் இருப்போர் வெகு சிலரே. பல்வேறு இசங்களை பின்பற்றுவோர் இணையும் ஒரு புள்ளி சாக்லேட்தான். பால்யகால நினைவுகளை நாம் அசைபோட்டால், […]

கிரிக்கெட் ஜாம்பவானன், இந்திய கிரிக்கெட்டின் வெற்றிநாயகன், கேப்டன் கூல், மேட்ச் ஃபினிஷர் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் தல எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்த நாள் இன்று. சமூக வலைதளங்களை அலறவிடும் ரசிகர்கள். சிறப்பு தொகுப்பு இதோ! ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பிறந்தார். தோனி எப்போதும் தனது உடல், மனம் ஆகியவற்றை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். உணவுப்பழக்கங்களிலும் அவர் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். இதுதான் […]

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது குஜராத் உயர்நீதிமன்றம். மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் விதிக்கப்பட்ட 2 […]

தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ வருகின்ற நாளை பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்கள்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும்‌ பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 2023 மாதம்‌ இரண்டாவது சனிக்கிழமை நாளை ஒவ்வொரு வட்டாட்சியர்‌ அலுவலகத்திலும்‌ நடைபெறும்‌ பொது விநியோகத்திட்ட […]

மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதையடுத்து, […]