பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக மீதமிருந்த 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்யப்பட்டனர். சென்னை மாட்டான்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ராஜகோபால் மற்றும் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரை மெரினா கடற்கரை போலீசார், கடந்த 2020 நவம்பர் மாதம் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். இந்த […]

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தன்வசப்படுத்தியது முதல் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். முதலில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு, பின்னர் தடை விதித்தனர். அடுத்ததாக பூங்கா, சினிமா மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் பெண்கள் வேலை செய்யவும், பொது இடங்களுக்கு ஆண்கள் துணையின்றி செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சர்வதேச நாடுகள் தாலிபன்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தாலும், அதனை அவர்கள் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில், இதுகுறித்து நல்லொழுக்க […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. விரைவில் 7-வது துவங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், சிலரின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. ஏற்கனவே, மாகாபா ஆனந்த் உட்பட சிலரின் பெயர்கள் வெளியாகி இருந்த […]

சர்ச்சைக்குரிய யூடியூபராக வலம் வருபவர் டிடிஎஃப் வாசன். யூடியூப்பில் கிடைத்த புகழ் வெளிச்சத்தை வைத்து தற்போது சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். அந்த வகையில், தமிழில் இவர் நடிப்பில் உருவாகும் முதல் படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் பூஜை கடந்த ஜூன் 29ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. மஞ்சள் வீரன் படத்தில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]

இந்திய சந்தையில் வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனங்களான ஹார்லி-டேவிட்சன் மற்றும் டிரையம்ப் போட்டி போட்டு தங்களது புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்440 பைக் மிக சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் என்ற இரு மோட்டார்சைக்கிள்கள் ஜூலை 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. யுகே-இல் […]

கேரளாவில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை சற்று கால தாமதமாக ஜூன் 8ஆம் தேதி துவங்கியது. இருப்பினும் ஜூன் மாதம் முழுவதுமே கேரளாவில் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு தீவிரமடையவில்லை. ஆனால் தற்போது ஜூலையில் தென்மேற்கு பருவமழை அங்கு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளாவில் இடுக்கி மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் […]

அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் திமுக முனைப்பாக இருக்கிறது. அகில இந்திய தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் என்னை சந்தித்து வருகின்றனர். அவர்களிடம் பாஜகவுக்கு எதிராக ஒரே அணி அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இதனால்தான் திமுக அமைச்சர்களை குறி வைக்கிறார்கள் என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழகத்தை தாண்டி தேர்தலில் போட்டியிடவே முடியாத திமுகவை பார்த்து […]

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பி மேட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜ்குமார்(29) இவரது மனைவி சாரதா(20) இவர்கள் சோபனபுரத்தில் விஜயசேகரன் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே காட்டிலின் தம்பதிகள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நேற்று காலை இருவரும் தலை கழுத்து போன்ற பகுதிகளில் விட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு […]

இம்மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் ஜூலை 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை டொமினிகாவிலும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் ஓவல் பார்க் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது. […]

தற்போது நம் அத்தனை கற்பனை காட்சிக்கும் உயிரூட்டும் வகையில் ரோட்டில் பயணித்து ஆகாயத்தில் பறந்து செல்லும் காரை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்காவின் அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனமானது இறங்கியுள்ளது. அதை சாத்தியப்படுத்துவதற்கான அத்தனை வழியையும் திறந்துவிட்டுள்ளது அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA). அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த பறக்கும் கார், அமெரிக்க அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. மாடல் ஏ என அழைக்கப்படும் அந்நிறுவனத்தின் […]