அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது ஷாருக்கான் விபத்தில் சிக்கியதாகவும் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தனியார் ஊடகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் ஷாருக்கானுக்கு படப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அடிபட்டு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதாகவும், உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கானுக்கு மூக்கில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு […]
யூடியூப் அசுர வளர்ச்சி கண்டுள்ளதால், அதன் மூலம் சம்பாதிப்பவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். யூடியூப் மூலம் பேமஸ் ஆன சிலர் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகின்றனர். குறிப்பாக யூடியூப்பில் ஸ்பூப் வீடியோ போட்டு பேமஸ் ஆன கோபி, சுதாகர் தற்போது படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். அதேபோல் யூடியூபர் எருமசாணி விஜய் முதலில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர், கடந்தாண்டு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள வேங்கைவயல் பகுதிக்குட்பட்ட குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் மற்றொரு சமூகத்தினர் இதுபோன்று செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் என பலரும் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதுவரை இந்த மனிதாபிமானமற்ற செயலை செய்தது யார்? என்பது தெரிய வராத நிலையில், காவல்துறையினர் […]
கல்வி போல் செல்வம் ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட கல்வியை இயலாதவர்களுக்கு சாத்தியமாக்குகிறது கல்விக் கடன்கள். இதனால், அவர்கள் விரும்பும் படிப்புகளை கல்லூரிகளில் தொடர முடிகிறது. இருப்பினும், வட்டி விகிதம், கடன் திரும்ப செலுத்தும் காலம் என பல காரணிகள் இதில் உள்ளது. எனவே, அதிகப்படியான செலவினங்களைத் தவிர்க்க கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கவனமுடன் இருப்பது அவசியம். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பின்வருபவற்றை கவனமாக ஆராய்ந்து கொள்ளுங்கள். என்னென்ன தகுதிகள் […]
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணேசபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாலமுருகன் (47) இவருக்கு போது மணி என்ற மனைவி மற்றும் சூரிய சுகம் உள்ளிட்ட இரண்டு மகன்களும் நாகஜோதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் மகள் நாகஜோதி திருமணம் முடிந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். மூத்த மகனான சூர்யா குடும்பத்துடன் தந்தையுடனே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். 2வது மகனான […]
கேதார்நாத். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற கேதாரீஸ்வரர் கோயில் உள்ளது. 12 ஜோதிர் லிங்கத்தில் இதுவும் ஒன்று. பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு, கேதாரீஸ்வரர் திருக்கோயிலானது வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அதன்படி ஏப்ரல் மாதத்தில் பக்தர்களுக்காக திறக்கப்படும் இக்கோயில், அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது தீபாவளி கழித்து மூடப்பட்டு விடும். இத்திருக்கோயில் மூடப்படும் நாளில் தேவர்கள் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே […]
சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டுள்ள GDP தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது 100 டிரில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியது இதுவே முதல் முறையாகும். இந்த 100 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் யார் அதிக பங்கீட்டை கொண்டு உள்ளனர், யார் யாரை முந்துகிறார்கள் என்பது தான் முக்கிய போட்டியாகவே உள்ளது. ஒருபக்கம் இந்தியா […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது மேம்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் பேங்கிங் ஆப் YONO for Every Indian அறிமுகம் செய்ததோடு, தனது ஏடிஎம் இயந்திரத்தில் புதிதாக Interoperable Cardless Cash Withdrawal (ICCW) சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ICCW சேவை மூலம் எஸ்பிஐ ஏடிஎம்-ல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல் பிற வங்கி வாடிக்கையாளர்களும் எவ்விதமான தங்கு தடையுமின்றி […]
லாட்டரி அடிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் எல்லோருடைய கனவுகளும் நனவாக வேண்டும் என்பது அவசியமில்லை. சிலருக்கு அதிர்ஷ்டம் உண்டு. ஒருவருக்கு லாட்டரி அடித்தது தெரிந்தால் அவருக்கு எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனால், லாட்டரி சீட்டைத் தேடத் தொடங்கும் போது, அது கிடைக்காமல் போனால் அவரது நிலை என்னவாகும். அமெரிக்காவில் ஒருவருக்கு அப்படித்தான் நடந்திருக்கிறது. மதுக்கடையில் 25 கோடி ரூபாய் லாட்டரி சீட்டை மறந்துவிட்டார் அவர். […]
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(29). இவருக்கும் சீர்காழியில் அடுத்துள்ள அரசூரை சேர்ந்த ரோஜா(25) என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று இரவும் ரோஜாவும், சிலம்பரசனும் தகராறு செய்து கொண்டனர். இதில் வாக்குவாதம் […]