அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமா இல்லையா என்பது குறித்த தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது. இந்த தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளது. அதாவது நீதிபதிகள் நிஷா பானு பாரத சக்கரவர்த்தி உள்ளிட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதியே அனைத்து தரப்பு வாதங்களும் […]

சினிமாவை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு மவுசு கூடிவிட்டது. சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்களின் அசுர வளர்ச்சியை பார்த்து பலரும் வியந்து போய் உள்ளனர். குக் வித் கோமாளி புகழ் முதல் மணிமேகலை வரை மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி, பி.எம்.டபிள்யூ கார் வாங்கும் அளவுக்கு அவர்கள் உயர்ந்துள்ளதற்கு அவர்களின் கடின உழைப்பே காரணம். அப்படி சினிமாவைக் காட்டிலும் சின்னத்திரை மூலம் புகழ் வெளிச்சத்தை பெற்றவர் தான் நடிகர் முத்துக்குமார். இவர் சினிமாவில் […]

பொதுவாக மாநிலமாக இருந்தாலும் சரி, அல்லது தேசிய அளவில் இருந்தாலும் சரி மிக பிரபலமான கோவில் திருவிழா அல்லது மிக பிரபலமான நிகழ்வு என்று அந்த பகுதி மக்கள் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வகையிலான ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெற்றால், அந்த விழாவிற்கு மதிப்பளித்து அந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் இருக்கின்ற சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை வெகு விமர்சையாக […]

தமிழகத்தில் ஒரு காலத்தில் பள்ளிக்கு சென்று படிப்பதற்கு பிள்ளைகளே இல்லாமல் இருந்தனர். ஆனால் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இதனை கருத்தில் கொண்டு ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தார். அதாவது பள்ளிகளில் மதிய உணவு திட்டம் என்பது அவர் கொண்டு வந்தது தான். அதன் பிறகு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அந்தத் திட்டத்தை விரிவு படுத்தினார். இன்றளவும் அந்த திட்டம் மாணவர்களிடையேயும், பெற்றோர்கள் இடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல […]

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையில் அசிசி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 110 மாணவர்கள் பயின்று வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஆலங்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். […]

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகை ரேகா நாயருக்கு, சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால், அவருக்கு சைடு ரோல்களே கிடைத்து வந்ததால், அதையும் தட்டிக்கழிக்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தொடர்ந்து நடித்து வந்தார். இவருக்கு புகழ் வெளிச்சத்தை கொடுத்த திரைப்படம் என்றால் அது ’இரவின் நிழல்’ தான். பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருந்தார் ரேகா நாயர். […]

செல்போன் நம்மிடம் இருந்து பிரிக்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இப்போது நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் மொபைலை எடுத்துச் செல்கிறோம். அப்படியிருக்கும்போது, உங்கள் மொபைல் தெரியாமல், தண்ணீர் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியுமா? அரிசியில் போடலாம் என உடனே சொல்லாதீர்கள். மொபைலை தண்ணீரில் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? என்ற விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். சுவிட்ச் ஆப் செய்யுங்கள் : உங்கள் மொபைல் […]

பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இலவச பேருந்து வசதியும் அமைத்து கொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, இந்த இலவச பஸ் வசதி அமைத்து தரப்பட்டுள்ளது. அதேபோல, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்களையும் வழங்கி வருகிறது. இந்த இலவச பஸ் பாஸ் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் […]

கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திமுக ஆட்சிக்கு வந்து அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முடித்து வைக்கும் அளவிற்கு வந்தது. ஆனால் இந்த வழக்கு தொடர்வாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கு குறித்த விசாரணை மீண்டும் […]

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு உயர்க்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2022-23ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து, கடந்த மே 8ஆம் தேதி முடிவுகளும் வெளியாகின. இதையடுத்து, உயர்கல்விகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க ஆரம்பித்தனர். தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஆரம்பமானது. அதன்படி, […]