தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று இரவு முதலாக மிக கனமழை பெய்யப் போவதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், கடும் மழை காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று வானிலை ஆய்வு […]

சென்னையில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் இப்போது அதிரடி திருப்பம் அரங்கேற்றியுள்ளது. சென்னை தாம்பரம், தாங்கல் தெருவில் வசிக்கும் 17 வயது சிறுமி, புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் இருக்கும் தனது தோழியின் வீட்டில் தங்கியுள்ளார். இரு நாட்களுக்கு முன்பு, அந்த இரண்டு சிறுமிகளும் நள்ளிரவில் 2 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த தோழியின் உறவினர்கள் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது தன்னை […]

கடந்த வாரம் முதலே தக்காளி விலை சதமடிக்க தொடங்கியுள்ளது. ஒரு புறம் பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி, மற்ற காய்கறிகளின் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஒரு வாரத்திற்கு முன் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 3 மடங்கு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை உயர்வால் ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு, மளிகைப் பொருட்களின் விலையும் திடீரென உயரத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தமிழகம் […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீசன் மாறியிருப்பதாலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால் கடலூர் […]

மத்தியப்பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தில் கோட்வாலி பகுதியில் வசித்து வருபவர் பரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது 40). இவர், ஜூன் 30ஆம் தேதி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கணவர் பரத் உயிரிழந்த மனைவியை ரகசியமாக சில நாட்கள் மறைத்து வைத்திருந்துள்ளார். மனைவி உயிரிழந்ததை தெரிவிக்காமல் கணவர் பரத் உடலை ஃப்ரீசரில் கடந்த 3 நாள்களாக வைத்துள்ளார். சுமித்ரியின் சகோதரர் அபத் திவாரிக்கு சந்தேகம் ஏற்படவே காவல்நிலையத்தில் புகார் […]

சின்னத்திரையில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த ஒருவர் ரேகா நாயர். இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘இரவின் நிழல்’ என்ற படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்ததன் காரணமாக சிறிது காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் ரேகா நாயர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அதில், ”தற்போது சில பெண்கள் நான் இதுபோன்று தான் ட்ரஸ் […]

கர்நாடகா மாநிலம் பெங்களூரு லாகேரே அருகே நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, அங்குள்ள விதான் செளதா லேஅவுட்டில் பெண்களின் உள்ளாடைகள் திடீர் திடீரென காணாமல் போய்விடுமாம். மொட்டை மாடிகளில் துணிகளை காயப்போட்டுவிட்டு போனால், அவை திருடு போயுள்ளது.. எல்லா துணிகளும் அங்கு இருக்கும்போது, கரெக்ட்டாக உள்ளாடைகள் மட்டும் மாயமாகி விடுகிறதாம். மேலும், ஆளில்லாத வீடுகளிலும் பெண்களின் உள்ளாடைகள், ஜாக்கெட்டுகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் குவிந்தன. அதிலும் […]

மக்கள் தினமும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். தினம் தினம் ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் எல்லாம் நிரம்பிக்கொண்டு தான் இருக்கின்றன. மக்கள் பயணத்தின் போது லக்கேஜ்களுக்கு வெவ்வேறு பைகள் பயன்படுத்தப்படுகின்றன. பைகள் அதிக எடை உள்ளதாக இருந்தால் கையில் எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கும். அதற்கு பதிலாக இப்போதெல்லாம் அதிக எடை உள்ள பொருட்களை சிரமம் இல்லாமல் நகர்த்திச் செல்ல சக்கர பைகள்/பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கனமான பொருட்களை எடுத்துச் செல்வதில் எந்தப் […]

சென்னையில் 32 கடைகள், மத்திய சென்னையில் 25 கடைகள், தென் சென்னையில் 25 கடைகள் என மொத்தம் 82 நியாய விலைக் கடைகளில் நாளை (ஜூலை 4) முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தக்காளி விலை ரூ.140-ஐ எட்டியுள்ள நிலையில், பண்ணை பசுமைக் கடைகளுடன், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக, […]

அமலாக்கத்துறை நடவடிக்கையால் பாஜக மீதான தனது நிலைப்பாட்டை திமுக மாற்றிக் கொள்ளாது, அமலாக்கத்துறைக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம், பாஜகவின் கைப்பாவை போல அமலாக்கத்துறை செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர். என் ரவி நேற்று கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தான் எடுத்த நடவடிக்கைக்கான காரணங்களை விளக்கி இருந்தார். […]