சமீபத்தில், காகங்கள் மர்மமான முறையில் இறந்ததன் மூலம் சென்னையில் தொடங்கிய பறவைக் காய்ச்சல் பாதிப்பு தற்போது திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், சேலம், மதுரை, மயிலாடுதுறை, திண்டுக்கல் மற்றும் கோவை என மொத்தம் 10 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பண்ணைகளில் திடீர் இறப்புகள் ஏற்பட்டால் உடனடியாக […]
தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அடிமை என்று முத்திரை குத்தும் திமுகவினர், உண்மையில் காங்கிரஸ் கட்சிக்குத் தங்களை அடகு வைத்துவிட்டு அடிமையாக செயல்படுவது யார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என அவர் சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, எங்களுடன் உள்ள தோழமைக் கட்சிகள் யாரும் ஆட்சியில் பங்கு கோரவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக […]
பெருமாள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சங்கு, சக்கரமும், அவரின் கருணை பொங்கும் முகமும்தான். ஆனால், சிவபெருமானைப் போலவே தனது திருமுடியில் பிறைச் சந்திரனைச் சூடிக்கொண்டு, பக்தர்களுக்கு அபயமளிக்கும் ஒரு அதிசய திருக்கோலம் தமிழகத்தில் உண்டு. 108 திவ்ய தேசங்களில் 25-வது திருத்தலமாகப் போற்றப்படுவது ‘தலைச்சங்காடு’. பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட எண்ணற்ற சங்குகளில், மகாவிஷ்ணுவின் கையில் குடிகொண்டிருக்கும் “பாஞ்சஜன்யம்” என்னும் தலைசிறந்த சங்கு அவதரித்த இடமே இதுவாகும். அதனால்தான் இந்த […]
நாம் எத்தனை இஷ்ட தெய்வங்களை மனதார வழிபட்டாலும், அந்த வழிபாட்டின் பலன்கள் நம்மை முழுமையாக வந்தடைய குலதெய்வம் இன்றியமையாதது. வாழ்க்கையில் ஏற்படும் தொடர் தடைகள், எதிர்பாராத அசுப நிகழ்வுகள் மற்றும் மனக்கவலைகளுக்கு குலதெய்வத்தின் அருள் குறைபாடே முக்கிய காரணமாக ஆன்மீக பெரியோர்களால் சொல்லப்படுகிறது. அத்தகைய குலதெய்வத்தை நம் இல்லத்திலேயே நிரந்தரமாக குடியிருக்க செய்யவும், அவர்களின் முழுமையான ஆசியை பெறவும் சில எளிய வழிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். குலதெய்வக் கோவிலுக்குச் […]
மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் பிப்ரவரி 12, 2026, அதாவது இன்று நாடு தழுவிய பாரத் பந்த் நடத்துவதால், தமிழ்நாடு முழுவதும் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், தொழிற்சங்கங்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பங்கேற்பதைப் பொறுத்து தமிழ்நாட்டில் அதன் தாக்கம் மாவட்ட வாரியாக மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய 29 தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைத்த நான்கு தொழிலாளர் குறியீடுகளுக்கு எதிர்ப்புத் […]
பிப்ரவரி 12 அன்று, இந்தியா முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகளின் ஆதரவுடன், நாடு முழுவதும் வேலைநிறுத்தம் (பாரத் பந்த்) நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டம் காரணமாக, வங்கி சேவைகள், போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அன்றாட சேவைகள் பல மாநிலங்களில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கலாம் நாடு தழுவிய இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் […]
செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் நடக்கும் திமுக வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் 5-ல் ஒரு பங்கு இருப்பவர்கள் திமுக வாக்குச்சாவடி முகவர்கள். சென்னையும், வட தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும்.. சென்னை, விழுப்புரம் மண்டலத்தில் 49 தொகுதிகளிலும் […]
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எலக்ட்ரிக் வாகனங்களின் (EV) பயன்பாட்டை அதிகரிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆரம்ப விலை சற்று அதிகமாக இருப்பதால், சாமானிய மக்களும் இதனை வாங்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்களுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
சென்னையின் அடையாறு பகுதியில் கடந்த மாதம் அடுத்தடுத்து காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, உயிரிழந்த காகங்களின் உடல்கள் உடனடியாக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர்தர விலங்கு நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பரிசோதனையில், அந்த காகங்கள் ‘H5N1’ எனப்படும் அதிதீவிர பறவைக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

