ரயில்களில் ஒவ்வொரு பயணியும் 2 சீல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் 20 ஆண்டுகளில் நகரத்தின் உயிர்நாடியாக மாறியுள்ளது , போக்குவரத்துக்கு மிகவும் வசதியான வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஒரு நபர் 2 சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்களை ரயிலில் எடுத்து செல்லலாம் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், பயணத்தின்போது பயணிகளின் ஆவணங்களை […]
சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. ஆதார் – பான் இணைப்பு : ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 ஆகும். இணைக்காதவர்களின் பான் எண் இன்று முதல் […]
தமிழகத்தில் இன்றுமுதல் வரும் 3ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மட்டும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. தற்போது தமிழகத்தில் அ மதுரை விமான நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40.4 டிகிரி செல்சியஸ் ஆக […]
மத்திய அரசின் உத்தரவை பின்பற்றாத ட்விட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2021-2022ம் ஆண்டுக்கு இடையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்குவதற்கு ட்விட்டருக்கு உத்தரவிட்டது. ஆனால், நிறுவனம் மத்திய அரசின் […]
உலகத்திலேயே முதல் முறையாக சாலைகளில் பறக்கும் காருக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனம் பறக்கும் காரை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) யிடம் சட்டப்பூர்வ அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தது. தற்போது அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் கார், பயணிகள் போக்குவரத்திற்காக அமெரிக்க அரசிடமிருந்து சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது. உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சான்றிதழ் பெற்ற முதல் பறக்கும் […]
ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இணைக்காத பான் கார்டுகள் இன்றுமுதல் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கியமான ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. அதன்படி குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் […]
திருமணமான ஆண்களின் தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்து, தேசிய ஆணையம் போன்ற ஒரு மன்றத்தை அமைப்பது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் ஜூலை 3-ஆம் தேதி விசாரிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மகேஷ்குமார் திவாரி என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி, கடந்த 2021-ம் ஆண்டு, 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 81 ஆயிரம் பேர் […]
தீபாவளி பண்டிகை தமிழக மக்களுக்கு முக்கிய பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதில் நீண்ட தூர பயணம் செய்பவர்கள் ரயிலில் முன்பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 3 லட்சம் பேர் முன்பதிவு செய்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால், பொதுமக்கள் வசதிக்காக […]
கர்நாடக மாநிலத்தில் அரசுத் துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த லோக் ஆயுக்தா பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 62 இடங்களில் 15 அரசு அதிகாரிகள் குறிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் பல ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தது. குறிப்பாக, பெங்களூரு கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவருக்கு தொடர்பான இடங்களில் […]
‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’, பிறக்கும்போது வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த குழந்தை என்ற வாசகம் ஆங்கிலத்தில் உண்டு. இந்த வாசகத்தை மெய்பிக்கும் விதமாக பிரிட்டனில் பிறந்து 2ஆம் நாளே ஒரு குழந்தை பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளது. இந்த குழந்தை குறித்த செய்திகளும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மிகப்பெரிய கோடீஸ்வரரான பாரி ட்ரூவிட் பார்லோவின் மகள் சாஃப்ரான் டிரைவ்ட் பார்லோ. 23 வயதான சாஃப்ரானுக்கும் கார்னர் என்பவருக்கும் திருமணம் […]