தற்போது விற்பனைக்கு வரும் காரில் பல மேம்பட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (Automatic Climate Control). காரில் கொடுக்கப்படும் இந்த தொழில்நுட்பம் காருக்குள் இருக்கும் ஏசி வெப்பநிலையை மேனுவலாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இந்த டெக்னலாஜி கார் கேபினின் ஈரப்பதம், காரின் வெப்பநிலை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும், யூஸர்கள் தங்களுக்கான தனிப்பட்ட டெம்ப்ரேச்சரை அமைக்க அனுமதிக்கிறது. மேலும், இது காருக்குள் இருக்க வேண்டிய […]

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய பேராளி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகள்தான் சாந்தி இவர் ஒரு மாற்றுத்திறனாளி. சென்ற இரண்டு மாதத்திற்கு முன்னர் வடிவேலுவின் மனைவி உயிரிழந்தார். இதனால் மன உளச்சலில் காணப்பட்டு வந்த சாந்தி, தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தியின் உடலை விட்டு […]

ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுலராமன் பகுதியை சேர்ந்த விவசாயி பொன் பாபா பாண்டியன்(50) இவரது மனைவி ரூபாராணி (45) பொன் பாபா பாண்டியன் தன்னுடைய மனைவி ரூபா ராணியின் பெயரில் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தார். அவரிடம் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து(70) என்பவர் 10000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு […]

மதுரை மாவட்டம் சமயநல்லூர் தொகுதி அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலம் சில தினங்களுக்கு முன்னர் இவருடைய சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து இருதரப்பினருக்கும் ஏற்பட்ட காதல் குறித்து எம்.சத்திரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தான் இருதரப்பிற்குள் மறுபடியும் தகராறு உண்டாகி கடந்த 24 ஆம் தேதி இரவு 2 கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். சுப்பையா (65), சூர்யா(23), […]

அருப்புக்கோட்டை அருகே உள்ள கொப்புசித்தம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருடைய மனைவி விஜயலட்சுமி தற்போது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவர்கள் பந்தல்குடியின் வசித்து வருகின்றனர் வீட்டை ஜெய்சங்கரின் சகோதரி பஞ்சவர்ணம் பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. கொப்புசித்தம்பட்டியில் தாமரைச்செல்வன் என்பவரின் மனைவி பூரண அபி என்பவர் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இதனால் தாமரைச்செல்வனுக்கும், ஜெய்சங்கருக்கும் முன்பாக இருந்து […]

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ்(52). தனியார் மருத்துவமனை ஊழியரான இவர் கடன் 2017 ஆம் வருடம் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக கொரட்டூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுவாமிதாசுடன் இருந்த தவறான நட்பின் காரண மாக சுவாமிதாஸ் வீட்டின் பணி பெண்ணாக இருந்த லட்சுமி (32) என்பவர் தன்னுடைய ஆண் நண்பர் முகமது இர்பான்(35) உடன் சேர்ந்து சுவாமிதாசை கொலை செய்தனர் என்பது […]

கடந்த 24 ஆம் தேதி ஏர் இந்தியாவின் AIC 866 விமானம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு சென்றது. இந்த விமானத்தில் ராம் சிங் என்ற பயணியும் சென்றுள்ளார் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் சமையல்காரர் ஆக இவர் பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் அந்த ஏர் இந்தியா விமானத்தின் 17F இருக்கையில் அமர்ந்து சென்ற நிலையில், விமானம் நடுவானில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பயணிகள் இருக்கைகள் இருக்கும் […]

தயாரிப்பாளராக பலராலும் அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும் பலர் எதிர்மறை விமர்சனக்கருத்தையே முன்வைத்தார்கள். ஆனாலும் இத்தம்பதி அவ்வாறாக விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது தமது வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரவீந்தர் மீது போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது […]

கிழக்கு டெல்லியின் ஷாதாராவில் பார்ஷ் பஜார் என்ற பகுதியில் 2️ பேர் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அந்த தம்பதியை இருசக்கர வாகனத்தில் வந்த 2️ பேர் வழிமறித்து நிறுத்தினர் அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை சோதனையிட்ட அந்த 2 நபர்கள் அவர்களிடம் வெறும் 20 ரூபாய் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கொள்ளையர்கள் எவ்வளவு தேடியும் […]

பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை. மேலும், போலிப் பத்திரப்பதிவும் ஒழிந்திருக்கிறது. போலி பத்திரப்பதிவு […]