கர்நாடகா மாநிலம், மைசூரில் இருந்து பெங்களூர் மற்றும் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆம்பூர் வழியாக சென்னை வரை செல்லக்கூடிய காவிரி விரைவு ரயில் இந்த வழித்தடத்தில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆம்பூர் அருகே நேற்று காவிரி விரைவு ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறைகள் மீது விரைவு ரயில் மோதியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆம்பூர்- […]

நான் முதல்வன் – 2023-24ஆம் ஆண்டிற்கான கல்லூரி கனவுப் புத்தகம் வழங்குதல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி முதலமைச்சர் அவர்களால் 25.06.2022 அன்று ‘ கல்லூரிக் கனவு ‘ என்னும் பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் , 2023-2024 கல்வி ஆண்டிற்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி, கீழ் கண்டவாறு […]

அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இது குறித்தான சிறப்பு தொகுப்பை பார்க்கலாம். ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த சர்வதேச தினம் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு […]

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை என்னும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் ” பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் 09.03.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது . இத்திட்டமானது முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக […]

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து குவகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் WFI தலைவர் பிரிஜ் பூஷன், கடந்த மார்ச் மாதத்துடன் தனது மூன்றாவது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், WFI தலைவர் தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விளையாட்டு அமைச்சகம் அதனை செல்லாது என அறிவித்தது.பிறகு இந்திய மல்யுத்த சம்மேளன விவகாரங்களை சமாளிப்பதற்கும், 45 நாட்களுக்குள் […]

13வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வரும் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா தவிர, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து […]

பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஐந்து மாதங்களுக்கு மேலாக போராடி வந்த மல்யுத்த வீரர் வீராங்கனைகள் திடீரென போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தப் போராட்டம் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, முடிவுக்கு வந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னணி மல்யுத்த […]

விமானத்தில் பணிப்பெண் ஒருவர் தல தோனிக்கு பல சாக்லைட்டுகளை கிஃப்டாக கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும்,முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அங்கு சென்றாலும், அவரை தல என அழைப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பலருடைய மனதை கிரிககெட் விளையாட்டின் மூலமும், தன்னுடைய நல்ல […]

இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குறித்த கருத்துக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பின்போது, ​​இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதிலுக்கு ஆதரவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். தேர்தல் தோல்விகளை எதிர்கொண்டுவரும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஆதாரம் இல்லாமல் பேசிவருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்திய முஸ்லிம்கள் […]

பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட உணவுப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஏற்கனவே பரிமாறப்பட வேண்டிய உணவு வகைகள் குறித்து அறிவிக்கப்பட்டதன் படி உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் உப்புமா வகைகள் வழங்க வேண்டும். செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள் வழங்க வேண்டும். புதன்கிழமை காய்கறி […]