சிலர் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய மாடல் ஸ்மார்ட் போனை வாங்குகிறார்கள், இன்னும் தங்கள் போன்கள் முற்றிலும் செயலிழக்கும் வரை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இங்குதான் உண்மையான கேள்வி தொடங்குகிறது. ஒரு பழைய போனை எவ்வளவு காலம் பயன்படுத்துவது பாதுகாப்பானது? அது வெளியில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கலாம், ஆனால் அதற்குள் ஏதேனும் ஆபத்து மறைந்திருக்கிறதா? நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் தொலைபேசியை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை எச்சரிக்கும் சில முக்கிய அறிகுறிகள் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த மனோஜ் பாண்டியன் இணைந்த நிலையில் நேற்று […]

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி அதில் உரையாற்ற உள்ளார். கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2:15 மணிக்கு ஒரு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்குவார். பின்னர், […]

உலகின் முன்னணி இ-காமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான், அடுத்த வாரம் மீண்டும் வேலைக்குறைப்பை (layoffs) தொடங்க தயாராகி வருகிறது. கார்ப்பரேட் பணியாளர்களில் சுமார் 30,000 பேரை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த வேலைக் குறைப்புகள் செவ்வாய்க்கிழமைக்குள் தொடங்கக்கூடும் என்றும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட குறைப்புகளின் அளவுக்கு சமமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 2026ல் புதிய வேலைக் குறைப்பு – எந்த பிரிவுகள் […]

இந்த சீசனில் சந்தையில் சர்க்கரைவள்ளிக்கிழங்குகளுக்கு அதிக தேவை உள்ளது. இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களும் சேர்மங்களும் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதனால் தான் அவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கின்றன. இருப்பினும், கலப்படம் இப்போது ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது. தற்போது, ​​ரசாயனங்கள் கலக்கப்பட்ட சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் சந்தைக்கு வருகின்றன. இவற்றை தொடர்ந்து சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று FSSAI எச்சரிக்கிறது. ரசாயனங்கள் கலக்கப்பட்ட சர்க்கரைவள்ளிக்கிழங்குகளை எப்படி அடையாளம் காண்பது என்று தெரிந்துகொள்வோம். […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால திருமணச் செலவுகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின்’ (Sukanya Samriddhi Yojana) வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை வெளியிட்ட அரசு, இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் தற்போதைய […]

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதார உதவியாக மாநில அரசு வழங்கி வரும் ‘வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை’ திட்டத்திற்கான புதிய அறிவிப்புகள் தற்போது மாவட்ட வாரியாக வெளியாகியுள்ளன. 10-ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் பயன்பெறக்கூடிய இத்திட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவுறுத்தல்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏற்கனவே 12 காலாண்டுகள் (3 ஆண்டுகள்) உதவித்தொகை பெற்று முடித்தவர்களுக்கு இனி மீண்டும் நிதி உதவி […]

2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நெருங்குகிறது. அதில் என்னென்ன இருக்கும்? எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்? எந்தத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கும்? இந்த பட்ஜெட்டில் சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு ஏதேனும் பெரிய சலுகைகள் இருக்குமா என்று மக்கள் இப்போதே கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். […]

தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள முதியோர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு, மாநில அரசு சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ‘தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள், தங்களின் 60 வயது நிறைவுக்குப் பிறகு மாதம் 1,200 ரூபாய் ஓய்வூதியமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், முதுமைக் […]