எதிர்வரும் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்ளும் விதமாக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பீகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ’மாமன்னன்’ திரைப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் கீர்த்தி. அந்த வகையில், பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் பற்றியும், தனக்கு வந்த புரபோசல்கள் பற்றியில் பேசி இருக்கிறார். முதலில் திருமணம் குறித்து கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், […]
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த மாத இறுதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து இந்த பொறுப்பில் அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தநிலையில் அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. எப்படி தேர்வு செய்யப்படுகிறார் டிஜிபி? இந்நிலையில், டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தற்போது காணலாம். ஒவ்வொரு மாநிலத்தில் […]
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து 32 வயது பெண் ஒருவரும், அவருடன் 22 வயது வாலிபர் ஒருவரும் சூரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற பெட்டியில் 60 பயணிகள் வரை இருந்தனர். இந்நிலையில், குவாலியரை தாண்டி ரயில் சென்று கொண்டிருந்தபோது 5 வாலிபர்கள் அந்த பெண்ணை செல்போனில் போட்டோ எடுத்துள்ளனர். இதற்கு அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே 5 பேரும் […]
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். மிகவும் பிரசித்தி பெற்றது செஞ்சி ஆட்டுச் சந்தைக்கு சேலம், தர்மபுரி, வேலூர்,ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, பெங்களுர் போன்ற மாநிலங்களில் இருந்தும் இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வர். இந்நிலையில், வரும் 29-06-23 தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனையாகி வருகிறது. இன்று செஞ்சி வாரச் சந்தையில் ஆடுகள் […]
சென்னை டி நகர் பிரகாசம் சாலையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று இருக்கிறது அந்த நிறுவனத்தின் பெயரில் சமீபத்தில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம், வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பி பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டோர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியாக பறிக்கப்பட்டுள்ளது இந்த விளம்பரத்தை நம்பி […]
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பபெட் தனது பெர்க்ஷயர் ஹாத்வே சாம்ராஜ்ஜியத்தை சொந்தமாக உருவாக்கியது மட்டும் அல்லாமல், இளம் வயதில் இருந்தே பங்கு முதலீட்டு வாயிலாக அதிகப்படியான பணம் சம்பாதித்து அதன் மூலம் பல நிறுவனங்களை வாங்கி தற்போது பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் கீழ் அவருடைய முதலீடு, வர்த்தகம், கைப்பற்றிய நிறுவனம் என அனைத்தும் நிர்வாகம் செய்யப்படுகிறது. பெர்க்ஷயர் ஹாத்வே தலைவரான வாரன் பபெட் பெரும் பணக்காரர் என்பதில் […]
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி வள்ளியம்மாள் (55). இவரது மகள் ராசாத்தி (32), ராசாத்தியின் கணவர் லட்சுமணன் (35). இவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். லட்சுமணன் கள்ளிப்பட்டி அருகிலுள்ள தனியார் இரும்புத் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு வள்ளியம்மாள், மகள் ராசாத்தி, மருமகன் […]
மதுரை மேலூர் அருகே உள்ள கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் இளமாறன் (83) இவருக்கு அண்ணாதுரை என்ற ஒரு மகன் மற்றும் மகள்கள் இருக்கின்றனர் தன்னுடைய பெயரில் இருந்த சொத்துக்களை பெற்றுக்கொண்ட மகன் மற்றும் மகள்கள் தன்னை சரியாக பராமரிக்க தவறிவிட்டதாக இளமாறன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த வருடம் புகார் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மூத்த குடிமகன் பராமரிப்பு சட்டத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஓசன் கேட் என்ற நிறுவனத்தின் டைட்டான் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 18ஆம் தேதி 5 சுற்றுலாப் பயணிகளுடன் நீருக்குள் மூழ்கியது. இந்தக் கப்பலுக்கு உதவி செய்யும் வகையில் கடல் மட்டத்தில் மற்றொரு கப்பல் காத்திருந்தது. நீருக்குள் உள்ள இந்த ஓசன் கேட் கப்பல் கடல் மட்டத்தில் உள்ள கப்பலுடன் எப்பொழுதும் தொடர்பிலேயே இருக்கும்.இந்நிலையில் சம்பவத்தன்று ஓசன் கேட் கப்பல் கடலுக்குள் மூழ்கி ஒன்றரை மணி […]