நேபளத்தில் தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றில் இன்று அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பேருந்து போகாராவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. பெனிகாட் ரோராங் கிராமப்புற நகராட்சி-5 இல் உள்ள பைசேபதி அருகே உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து திடீரென சாலையை […]
தமிழ்நாட்டில் சமீபகாலமாக முடி மாற்று அறுவை சிகிச்சை (Hair Transplant) மற்றும் பல்வேறு அழகு மேம்பாட்டுச் சிகிச்சை மையங்கள் (Cosmetic Clinics) காளான்கள் போல பெருகி வருகின்றன. இத்தகைய மையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும், தகுதியற்ற நபர்கள் சிகிச்சைகளை மேற்கொள்வதாலும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனை தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சுகாதாரத் துறை தற்போது மிகக் கடுமையான வழிகாட்டுதல்களை […]
சென்னை சாலிகிராமத்தில், பெற்ற மகளையே தனது இச்சைக்கு இரையாக்கிய ஒரு தாயின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நபர், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வரும் சூழலை சாதகமாக்கிக் கொண்ட அவரது மனைவி, வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த விவகாரம் 20 வயதான அவரது மகளுக்கு தெரியவரவே, அவர் தனது தாயை கண்டித்ததோடு, அவருடன் பேசுவதையும் தவிர்த்து […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் எம்.ஜி.ஆர் நகரில் அரங்கேறியுள்ள இந்த திடுக்கிடும் கொலை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஆலையில் பணியாற்றியபோது கவிதா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம், ஏற்கனவே திருமணமான வினோத் குமாரை இரண்டாவது திருமணத்திற்கு கொண்டுச் சென்றது. இரு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிக்கலான குடும்பச் சூழலில் வாழ்ந்து வந்த இவர்களது வாழ்க்கையில், சமூக வலைதளப் பயன்பாடு ஒரு பெரும் […]
திருப்பதியில் 35 வயதான லதா என்ற பெண், தனக்கு ஏற்கனவே திருமணமாகி நான்கு குழந்தைகள் இருப்பதை முற்றிலும் மறைத்து, 27 வயது இளைஞரான அர்ஜுனை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடன் பணியாற்றிய அர்ஜுனிடம், தனக்கு வெறும் 28 வயதுதான் ஆகிறது என்றும், தான் ஒரு ஆதரவற்ற பெண் என்றும் லதா நம்பவைத்துள்ளார். முதல் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த லதா, தனது கடந்த கால […]
தென் தமிழக மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்றைய வானிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நள்ளிரவு முதலே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி […]
தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை, எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் அதிரடியாக சிறைபிடித்துள்ளனர். மீனவர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகையும் இலங்கை ராணுவம் பறிமுதல் செய்துள்ளது. இச்சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதி மீனவக் குடும்பங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே தமிழக மீனவர்கள் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் அதிரடி முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுக்குப் பிறப்பித்துள்ள ஒரு வாய்மொழி உத்தரவு, தற்போதைய ‘ஹாட் டாப்பிக்’ ஆக மாறியுள்ளது. திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளைத் தேமுதிகவினர் யாரும் தனியாகச் சந்திக்கக் கூடாது என அவர் தடை விதித்திருப்பது, கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என்ற […]
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, கூட்டணியில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படும் தேமுதிக, தாங்கள் போட்டியிட விரும்பும் 13 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை திமுக மேலிடத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த கோரிக்கைப் பட்டியலில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய விருத்தாசலம் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளுடன், மதுரை […]
பெங்களூருவின் கோவிந்தாபுரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பீகாரைச் சேர்ந்த தையல் கலைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக உதவி செய்து வந்த ஜஹாங்கீர் என்பவருடன் ஏற்பட்ட நட்பு, காலப்போக்கில் நெருக்கமான குடும்ப நட்பாக மாறியுள்ளது. ஆனால், அந்த நன்மதிப்பை துஷ்பிரயோகம் செய்த ஜஹாங்கீர், கடந்த 2023-ம் ஆண்டு தையல்காரர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, அவரது மனைவியை கட்டாயப்படுத்திப் பாலியல் […]

