இந்தியாவில் உடல் பருமன் என்பது வெறும் உணவுப் பழக்கம் சார்ந்த தனிநபர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு தீவிரமான ‘தேசிய சுகாதார அவசரநிலை’ என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்க தொடங்கியுள்ளன. ‘கிளினிக்கல் ஒபிசிட்டி’ (Clinical Obesity) இதழில் வெளியான சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 25.4 கோடி (254 மில்லியன்) மக்கள் பொதுவான உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனை வெறும் வாழ்க்கைமுறை மாற்றமாகப் பார்க்காமல், ஒரு […]

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் அமைப்புசாரா தொழிலாளர்களின் முதுமை கால நிதி தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்’ (PM-SYM) என்ற ஓய்வூதிய திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் சேரும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் 60 வயதிற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.3,000 உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, வீட்டுப் பணியாளர்கள், தெரு வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் […]

கோவை மாநகரின் எல்லையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் கம்பீரமாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி மலை, ஆன்மீக உலகில் ‘தென்கயிலை’ என்ற உன்னத இடத்தைப் பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க எப்படி ஏழு மலைகளை கடக்க வேண்டுமோ, அதேபோல் இங்கு ஏழாவது மலையின் உச்சியில் சுயம்புவாக வீற்றிருக்கும் சிவபெருமானை காண ஏழு மலைகளை கடக்க வேண்டும். ஆனால், இந்தப் பயணம் வெறும் நிலப்பரப்பை கடப்பதல்ல; நம் உடலுக்குள் இருக்கும் ஏழு சக்தி […]

நிதி மோசடிகளைத் தடுக்க அரசாங்கமும் நிதி நிறுவனங்களும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சமீபத்தில், மத்திய அரசு 88 லட்சத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைத் தடுத்து சந்தேகத்திற்கிடமான மொபைல் இணைப்புகளை அகற்றியது. இதனால், ரூ.1,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிதி மோசடிகள் தடுக்கப்பட்டன. இந்த விஷயங்கள் குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் உதவியுடன் […]

ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மகா சிவராத்திரி என்பது ஒரு மனிதன் தன் உணர்வுகளை கடந்து இறைநிலையை உணர்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாகும். இந்து தர்மத்தில் வைகுண்ட ஏகாதசி மற்றும் மகா சிவராத்திரி ஆகிய இரு தினங்களில் மட்டும் இரவு முழுவதும் கண் விழித்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற விரதங்களில் உணவைத் தவிர்ப்பதற்கு (உபவாசம்) முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், சிவராத்திரியில் மட்டும் ஏன் உறக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்குப் பின்னால் ஆழமான வாழ்வியல் […]

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியும் அதன் ஆபத்துகளும் குறித்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Anthropic நிறுவனத்தின் மேம்பட்ட AI மாடலான Claude, கடும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போது ஆபத்தான நடத்தைகளை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ‘Claude’ மாடலின் ஆபத்தான நடத்தை AI மாடலை ஷட் டவுன் செய்யப் போவதாக சொல்லப்பட்ட போது, அது கடுமையாக எதிர்வினை காட்டியதாக Anthropic நிறுவனம் […]

ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்திலிருந்து (NBFC) கடன் பெறுவது, பலருக்குப் பின்னர் சவாலான காலகட்டத்தைத் தொடங்குகிறது. கடன் முழுமையாக அடைக்கப்படும் வரை, ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் தவணைத் தொகை (EMI) கட்டாயமாக செலுத்த வேண்டும். ஒரு கடன் பெறுபவர் சில தவணைகளை செலுத்தத் தவறினால், அந்த கடன் வழங்கிய நிறுவனம் வழக்கமாக பணம் வசூலிக்கும் முகவர்களை (recovery agents) அனுப்புகிறது. பொதுவாக, அவர்கள் வசூலிக்கும் […]

இதற்கு முன்பு திரையுலகில் கதாநாயகிகளின் கெரியர் மிகக் குறுகியது என்று கூறப்பட்டு வந்தது.. ஏனெனில் திருமணம் ஆகிவிட்டாலே அந்த ஹீரோயின் ஃபீல்ட் அவுட் என்ற நிலை இருந்தது.. ஆனால் இப்போது, ​​40 வயதுக்கு பிறகும், அவர்கள் தொடர்ந்து நட்சத்திர ஹீரோயின்களாகவே இருக்கிறார்கள், திருமணத்தை விட தங்கள் கெரியருக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். திருமணத்திலிருந்து விலகி இருக்கும் கதாநாயகிகள் யார் என்று பார்ப்போம். அனுஷ்கா அனுஷ்கா திரையுலகில் நுழைந்து பல வருடங்கள் ஆகின்றன. […]

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதன்மை தேர்வுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக தேர்வாணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த தேர்வுகள் தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, குளறுபடிகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் […]

நகைக்கடைக்கு சென்று தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கும்போது, அவற்றை ஒரு இளஞ்சிவப்பு (Pink) நிற காகிதத்தில் வைத்து மடித்துத் தருவதை நாம் பார்த்திருப்போம். இன்றைய நவீன கார்ப்பரேட் கடைகளில் ஆடம்பரமான பெட்டிகள் புழக்கத்திற்கு வந்தாலும், பாரம்பரியமான பல கடைகளில் இன்றும் இந்த பிங்க் பேப்பர் கலாச்சாரம் தொடர்கிறது. இதற்குப் பின்னால் வெறும் சென்டிமென்ட் மட்டுமல்ல, வியக்க வைக்கும் வணிகத் தந்திரமும், அறிவியல் காரணமும் ஒளிந்திருப்பதாக தெரிவிக்கிறார் நகை வியாபாரி […]