fbpx

சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டுக்கழகம்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ கடன்‌ திட்டங்களான தனிநபர்‌ கடன்‌, சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில்‌ கடன்‌ உள்ளிடவற்றிற்கு விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டுக்கழகம்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ கடன்‌ திட்டங்களான தனிநபர்‌ கடன்‌, சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில்‌ கடன்‌, கைவினை கலைஞர்களுக்கு கடன்‌, கல்வி கடன்‌ திட்டம்‌ ஆகிய […]

கராச்சியில் உள்ள ஒரு மூடியிருந்த தனியார் பள்ளியில், ஆஷிக் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆஷிக் அவரது மனைவி நர்கீஸ் மற்றும் அவரது ஆறு குழந்தைகளுடன் கடந்த ஒன்பது மாதங்களாக மூடப்பட்டிருந்த அந்த தனியார் பள்ளியில் தங்கி இருந்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆசிக், நர்கீஸ் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சன்டையில் ஆத்திரமடைந்த ஆஷிக்,  தலையணை வைத்து நர்கீஷின் முகத்தில் அழுத்தி உள்ளார்.  இதனால் மூச்சு திணறி […]

66 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட குரூப் 1 பணியிடங்களில் காலியாக உள்ள 66 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2021 ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் […]

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநில நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு வரும் நீரின் அளவு, கூடுவதும் குறைவதுமாக இருக்கிறது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியுள்ளதால் […]

அதிமுகவில் இரண்டாம் கட்டமாக நீக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டமாக நீடித்து கொண்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் நிர்வாகிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி உட்பட 22 தலைமைக் கழக நிர்வாகிகளை நீக்குவதாக நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று இரண்டாம் கட்ட நிர்வாகிகள் நீக்கப் பட்டியலை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, முன்னாள் துணை […]

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய ஆண் நண்பரை 30 இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்த பேராசிரியை கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ரதீஷ்குமார் என்பவர் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். அங்கு, மதியம் 3 மணி அளவில் பதிவேட்டு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரதீஷ்குமாரை பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசாரின் […]

கோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்து தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்து உள்ளார். டாக்டர் மற்றும் டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அயலான் படமும் திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில் […]

ஆளும் மத்திய அரசு உணவுப் பொருளான அரிசி மற்றும் கோதுமைக்கு ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. உணவுப் பொருள்களுக்கான இந்த வரியை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக முழுவதும் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருக்கின்றனர். இது பற்றி சேலம் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சியாமளநாதன் நிருபர்களிடம் கூறியது, உணவு […]

கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்திய மாநகராட்சி அதிகாரிகளை, நகைக்கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம் மயிலாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று மாலை சென்னை மயிலாப்பூர் பஜார் சாலை பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகளில் முகக்கவசம் அணிவதை மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். […]

33 வயது பெண் ஒருவர் கட்டாய கருக்கலைப்பு தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு டெல்லியின் ஜீதாபூர் என்ற பகுதியில் அரங்கேறிய சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”உயிரிழந்த பெண் கடந்த 8 ஆண்டுகளாகவே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் இவருக்கு மென்பொருள் பொறியாளர் ஒருவருடன் உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் லிவ் இன் ரிலேஷன்சிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். அந்த […]