fbpx

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருவிகளில் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாகக் காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. இங்கு, ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்து மகிழ்வார்கள். மேலும், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றைக் காண, சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். […]

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவில் இதுவரை 1,64,054 பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியானது. அன்றைய தினமே இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியது. பி.இ.,பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பத்தை மாணவர்கள் https:/www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், மாணவர்கள் சொந்தமாகவோ அல்லது பள்ளிகள், […]

அதிமுக தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, வருகின்ற 25ஆம் தேதி இரு தரப்பினரும் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக விவகாரம் தொடர்பாக வருவாய்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் E-2 ராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அமைந்திருக்கும் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஒரு பிரிவினர் சென்ற போது, […]

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் […]

மத்திய பிரதேசத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் 10 வயது சிறுவனை முதலை விழுங்கியது. நேற்று காலை சம்பல் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை முதலை தாக்கியுள்ளது. முதலை சிறுவனை ஆற்றில் இழுத்துச் சென்றது. சம்பவ இடத்தில் இருந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.. மேலும் குச்சிகள், கயிறு […]

புற்றுநோயை உண்டாக்கும் எப்ஸ்டீன் பார் வைரஸ் கிருமி  நரம்பு செல்களைத் தாக்கி, கொழுப்பு அமிலங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதக் கூறுகள் போன்ற உயிரி மூலக்கூறுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது மத்திய நரம்பு மண்டலம் மற்றும் மூளை புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எப்ஸ்டீன் பார் வைரஸ்  வைரஸ் மனிதர்களுக்கிடயே மக்கள்தொகையில் பரவலாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுவாக எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை, ஆனால் நோயெதிர்ப்பு சக்தியில் பாதிப்பு […]

பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.. தொடர்ந்து பேசிய இடைக்கால […]

கொரோனா தொற்றுநோய் (கோவிட் -19) காலத்தில், மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசாங்கம் தொடங்கியது, அது இப்போது செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியில்லாத பலர் அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இந்த மக்கள் தங்கள் அட்டைகளை ஒப்படைக்குமாறு உத்தரப்பிரதேச அரசாங்கம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. பல ரேஷன் கார்டுதாரர்கள் தகுதியில்லாமல் […]

குளிர் பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பை என்று தெரிந்தாலும், அவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது… வீடு, அலுவலகம், பார்ட்டி என எல்லா இடங்களிலும் மக்கள் குளிர்பானம் அருந்துவதைக் காணலாம். ஆனால் குளிர் பானங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை குறிப்பாக குழந்தைகளுக்கு குளிர்பானங்களை கொடுக்கவே கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.. குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால், அது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். […]

சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது, சென்னை தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சலகங்களின் முதல்நிலை கண்காணிப்பாளரால் ஜூலை 28 அன்று காலை 11 மணிக்கு கோட்ட அளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அஞ்சலகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர்கள், தங்களின் புகார்களை / ஆலோசனைகளை தபால், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் 18.07.2022-க்குள் அனுப்ப வேண்டும் […]