fbpx

கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.. கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்கள் சட்டவிரோதமாக இந்தியா வருவதற்கு முறைகேடாக விசாக்கள் வழங்கியதாக சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. கடந்த மாதம் இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.. […]

சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சென்னை மற்றும் திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகம் பேருந்தை இயக்கி வருகிறது. எனினும், கொரோனா தொற்று பரவுதலை அறவே தவிர்த்திடும் பொருட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு அறிவித்துள்ள […]

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான். இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சர் உறுதி அளித்தவாறு ஆன்லைன் […]

வடக்கு டெல்லியின் புராரியில் உள்ள யமுனை ஆற்றில் குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உத்திரபிரதேச மாநிலம் லோனியில் வசிக்கும், வாசிம் (15), கமல் (17), இலியாஸ் (20) மற்றும் சமீர் (17) ஆகிய நான்கு சிறுவர்களும் வியாழக்கிழமை அன்று யமுனை ஆற்றுக்கு குளிப்பதற்கு சென்றனர். ஆற்றுக்கு குளிக்க சென்ற சிறுவர்கள். வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் மேற்கொண்ட […]

திருச்சி சுங்கச் சாவடியில் சசிகலா சென்ற கார் கண்ணாடி மீது தானியங்கி தடுப்பு விழுந்து கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, அதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடியில் அவர் […]

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்கக் கூடிய நிலையில், கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின்போது, எடப்பாடிக்கு 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த உறுப்பினர்கள் படிப்படியாக எடப்பாடி ஆதரவு நிலைக்கு திரும்பினர். நேற்று வரை எடப்பாடி பழனிசாமிக்கு, 2,443 பேர் ஆதரவு […]

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட அகவிலைப்படி (DA ) உயர்வு அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அகவிலைப்படி குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.. அதன்படி, இந்த மாதத்தில் நிலையில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5% அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் மற்றொரு புத்ய தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது, அகவிலைப்படி உயர்வு மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. மே மாதத்திற்கான DA மற்றும் Dearness […]

வங்காளதேசத்தை சேர்ந்தவர் பைசல் அகமது. இவர் அல்-கொய்தா அமைப்பின் தீவிரவாதி ஆவார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டில் வங்காளதேசத்தை உள்ள எழுத்தாளர் ஒருவரை கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் பைசல் அகமது உள்பட மூன்று பேருக்கு வங்காளதேச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஆனால் பைசல் அகமது வங்காளதேசத்தில் இருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்து அசாமில் வசித்து வந்தார். பிறகு பெங்களூருவுக்கு வந்து பொம்மனஹள்ளியில் வாடகைக்கு, வீடு […]

மதுரை விராட்டிபத்தில் வசித்து வருபவர் ஹரிஹரன் இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியில் வசித்து வருபவர் பாண்டி இவருடைய மூத்த மகள் அபர்ணா (19). பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் அபர்ணாவும் ஹரிஹரனும் காதலித்து வந்துள்ளனர். சிறிது காலம் கழித்து அபர்ணா ஹரிஹரனை விட்டு விலகியதாக தெரிகிறது. இதற்கிடையில் ஹரிஹரன் அபர்ணாவின் வீட்டிற்கு […]

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.. இதனால் இலங்கை மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.. மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவிவிலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் […]