fbpx

அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் கூறி, திமுகவின் கைக்கூலியாக கே.பி.முனுசாமி செயல்படுவதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, கடந்த வாரம் ஓபிஎஸ் திமுக-வை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால், முனுசாமி மகன் எம்.சதீஷ்க்கு கிருஷ்ணகிரியில் பால்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை 99 ஆண்டு வாடகைக்கு […]

தேர்தல் பிரச்சாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.. மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.. இதில் அவர் மார்பில் குண்டு பாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.. ரத்த வெள்ள்த்தில் கீழே விழுந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். […]

சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை பிரிவினைவாதி என்று குற்றம்சுமத்தி வரும் நிலையில் தலாய்லாமாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் விமர்சனம் செய்து வருகிறது.இதற்கிடையே, நேற்று முன்தினம் 87-வது பிறந்தநாள் கொண்டாடிய தலாய்லாமாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதற்காக அவரை சீனா நேற்று விமர்சனம் செய்ததுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியது, தலாய்லாமாவின் சீனாவுக்கு எதிரான […]

கடலூர் முதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பத்தை சேர்ந்த சபரிநாதன் (30) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவருடன் சொந்த வேலைக்காக நேற்று மாலை குள்ளஞ்சாவடி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 7 மணி அளவில் கடலூர் அடுத்த பெரியகாட்டுசாகை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த அதே சமயத்தில் கடலூரில் இருந்து 30 பயணிகளுடன் விருத்தாசலம் […]

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வசித்து வருபவர் நரசிம்மராஜ்(37). இவருக்கும், திருவானைக்காவல் கீழகொண்டையம்பேட்டையை சேர்ந்த சிவரஞ்சனியை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரதிக்ஷா(10), லக்ஷா(7) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நரசிம்மராஜ் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதில் தேவையான வருமானம் கிடைக்காததால் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்தும் நிலையில் இருந்துள்ளார். அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மராஜ் சமயபுரம் பகுதியில் உள்ள […]

மதுராந்தகம் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியது.. இந்த கொடூர விபத்தில், 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.. 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. […]

சமீபத்தில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிட் பூச்சி அல்லது நைரோபி ஈ உடன் தொடர்பு கொண்டதால் கடுமையான தோல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டனர். நைரோபி ஈ பூச்சி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு இப்போது குணமடைந்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளனர் டார்ஜிலிங், சிக்கிம், மேற்குவங்கம் […]

நாடு முழுவதும் திருமண சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பல்வேறு காரணங்களுக்காக மணப்பெண்கள் தங்களுடைய திருமணத்தை நிறுத்தும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன… அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் ஒரு திருமணத்தில் மணமகன் கருப்பாக இருப்பதாக கூறி மணப்பென் திருமணத்தை நிறுத்தி உள்ளார்.. மணமகள் நீதா யாதவ் ரவி யாதவ் இருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.. திருமண சடங்குகள் தொடங்கி, இருவரும் மாலை மாற்றிக்கொண்ட நிலையில் திடீரென திருமணத்தை நிறுத்துவதாக […]

அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.. இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58,4438,252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது புகார் எழுந்துள்ளது.. இதுகுறித்து காமராஜ், டாக்டர் இனியன், டாக்டர் இன்பன், சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு நேற்று செய்துள்ளது.. இந்த வழக்கினை தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் […]

திமுகவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, “பல அடக்குமுறைகள் இருந்த போதும் அம்மாவும் நானும் சேர்ந்து கழகத்தை கட்டி காத்துள்ளோம். அம்மாவிடம் இருந்த என் நட்பு புனிதமானது. அம்மா என் மீது வைத்திருந்த அன்பு இந்த உலகத்தில் உள்ள யாரும் வைத்திருக்க முடியாது. என்னை அம்மாவிடம் இருந்து பிரிக்க […]