fbpx

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வரும் 10ஆம் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டப வளாகத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. பொதுக்குழு தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வந்தாலும், மற்றொரு புறம் பொதுக்குழு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை கழகம் செய்து […]

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், குறிப்பேடு, சீருடை வழங்குவதில் தாமதம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களில் 60% மட்டுமே பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பேடுகள் (நோட்டுப் புத்தகம்), சீருடைகள் ஆகியவை யாருக்கும் இன்னும் வழங்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது. திட்டமிடலில் ஏற்பட்டத் தவறு தான் […]

பொறியியல், அரசு கலைக்கலூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.. 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் பொன்முடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொன்முடி […]

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக முயற்சிப்பதாகவும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தெரிவித்துள்ளார் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.. மேற்கு ஜப்பானின் நாரா நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், அவர் மார்பில் குண்டு பாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.. ரத்த வெள்ள்த்தில் கீழே விழுந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். […]

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் எந்தத் துயரம் நடந்துவிடக் கூடாது என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருந்தார்களோ அந்தத் துயரம் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நிகழ்ந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்ற மாணவர் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

இலங்கையை போல் இந்தியாவிலும் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடக்கலாம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ”பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறினார். அதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 16 […]

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்று வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராம்நகர் கோட்வார் சாலையில் அமைந்துள்ள தேலா மண்டலத்தில் இந்த விபத்து நடந்தது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண் குழந்தை உட்பட 11 பேர் பயணித்துள்ளனர்… உத்தரகாண்ட் […]

கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரின் மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. 2017-ம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக தனிப்படை மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதுவரை 240-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. அந்த வகையில் நேற்று முதன்முறையாக மணல் ஒப்பந்ததாரர்களான ஆறுமுகசாமி மற்றும் அவரின் மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.. கடந்த […]

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,552 காலிப் பணியிடங்களுக்கு 07.07.2022 முதல் 15.08.2022 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 2,180 மற்றும் புலனாய்வுத் துறையில் […]

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானின் நாரா நகரத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், அவர் மார்பில் குண்டு பாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.. ரத்த வெள்ள்த்தில் கீழே விழுந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காலை 11:30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக ஜப்பான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஷின்சோ அபேவை சுட்டது தொடர்பாக 41 வயதான டெட்சுயா யமகாமி […]