அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில், தற்போது அந்தக் குழுவின் பெயரில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இந்த அமைப்பு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில், டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் […]

தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் (KMUT) தற்போது இரண்டாம் கட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 1.13 கோடி பெண்கள் பயனாளிகளாக உள்ள இந்தத் திட்டத்தில், கூடுதலாக 17 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் இத்திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாக தெரிவித்தார். மேலும், திராவிட மாடல் ஆட்சி பெண்களின் நலனுக்காக இன்னும் பல திட்டங்களைச் […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ ரேட் (வட்டி விகிதம்) குறைப்பைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) ஆகியவை தங்கள் கடன் வட்டி விகிதங்களை உடனடியாக குறைத்து அறிவித்துள்ளன. இந்த விகித குறைப்புகள் இன்று (டிசம்பர் 15) முதல் அமலுக்கு வருவதால், புதிய மற்றும் ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் மாதாந்திரத் தவணைகள் (EMIs) குறைந்து, கடன்கள் […]

உத்தப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், திருமணமாகி 3 ஆண்டுகளாக கள்ளக்காதலனுடன் உறவில் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நீலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கும் ரவி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் உறவு நீடித்து வந்துள்ளது. நீலம் அடிக்கடி தனது காதலன் ரவியுடன் தங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு நீலம் மீண்டும் […]

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் ஆண்டியோகுவா மாகாணத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில், 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் எல் சிஸ்பெரோ என்ற கிராமப்புறப் பகுதியில் நடந்துள்ளது. ஆண்டியோகுவெனோ உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் பள்ளிச் சுற்றுலாப் பயணத்தை முடித்துக்கொண்டு, டோலூவிலிருந்து மெடலினுக்குத் திரும்பி வந்துள்ளனர். அப்போது, […]

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளாட்சி பகுதிகளிலுள்ள பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியில் ( App ) பதிவான மாணவர்களின் உணவு உட்கொள்ளும் பதிவுகள் சதவீதம் குறைவாக இருப்பது அறிவுறுத்துதல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]