15 – வது நிதி ஆணையத்தின் கீழ் , தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7,523.06 கோடி ரூபாய் மானியத் தொகை விடுவிப்பு. 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில், மாநிலங்களில் உள்ள தகுதி வாய்ந்த கிராம பஞ்சாயத்து, தொகுதி பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு, பதினைந்தாம் நிதி ஆணையத்தின் மானியத் திட்டங்களின் கீழ், மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை விடுவித்துள்ளது. 15 – வது நிதி ஆணையத்தின் […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். சித்த மருத்துவத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2 கோடியில் அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான மசோதா, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் […]
பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் வரும் 15-ம் தேதி […]
தமிழக அரசுப் பள்ளிகளில் தொழில் துறை பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநருடன் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளிகளிடம் […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இதில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாக்கியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் இக் கூட்டணியில் கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஒரு சில கட்சிகள் […]
பாபா வங்காவின் வினோதமான துல்லியமான கணிப்புகளின் பகுதிகள் பல தசாப்தங்களாக உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளன. அவர் பல்கேரியாவைச் சேர்ந்த கண்பார்வையற்ற தீர்க்கதரிசி ஆவார்.. அவர் ‘பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்’ என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கான பாபா வங்காவின் கணிப்புகளில் அதிக கவனம் மற்றும் கவனம் குவிந்துள்ளது. 2025 முதல் 5079 வரை என்னென்ன நடக்கும் என்று அவர் கணித்துள்ளார். உலகளாவிய நெருக்கடிகள் […]
பாக்நீரிணை கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதி, தென்தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, குமரிக் கடல் பகுதிகளையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வரும் 13-ம் தேதி வரை பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், கணக்கீட்டுப் படிவம் ஒப்படைக்க நாளை கடைசி நாளாகும். தலைமை தேர்தல் ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், நாளை 11-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 6 கோடியே 40 லட்சத்து […]
காஞ்சிபுரம் என்றாலே தமிழ்நாட்டின் ஆன்மிக வரலாற்றில் தனி இடம் உண்டு. எண்ணற்ற சிவத் தலங்கள், வைணவ திவ்ய தேசங்கள், சக்தி வழிபாட்டு மையங்கள் என ஆன்மிகத்தின் பல்வேறு பரிமாணங்கள் ஒருங்கே செறிந்த நகர் இது. இந்தப் புனித மண்ணில், கைலாசநாதர் சமேத கனகாம்பிகை தாயார் திருக்கோவில் தனித்துவமான ஆன்மிக மகிமையுடன் விளங்குவது மறுக்க முடியாத உண்மை. இந்தத் தலத்தின் சிறப்பே, புராண வரலாறும் இயற்கை அமைப்பும் ஆன்மிக நம்பிக்கையும் ஒன்றிணைந்திருப்பதுதான். […]
கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்ததற்கு காரணமான, இரவு விடுதி இடித்து தரைமாக்கப்பட்டது. வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பிரபலமான பார்ட்டி இடமான பிர்ச் பை ரோமியோ லேன், கடந்த சனிக்கிழமை இரவு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் ஊழியர்கள் மற்றும் சில சுற்றுலாப் பயணிகள் ஆவர்.. இந்த தீ விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை […]

