மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் Sanchar […]

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் உடல்நிலை பற்றி தெளிவான தகவலை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அவரின் ஆதரவாளர்கள் இன்று பெரும் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் பரவி வரும் பாக் பிரதமர் ஷெரீஃப் அரசுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற உள்ளது.. இம்ரான் கானின் பிடிஐ ஆதரவாளர்கள் அவர் உண்மையில் எப்படி இருக்கிறார் என்பதை அரசு வெளிப்படையாக […]

வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.. தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.. சென்னை, திருவள்ளூரில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ […]

காலையை நாம் எப்படித் தொடங்குகிறோம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அந்த முதல் சில மணிநேரங்கள் நமது செல்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது, இது நோய்க்கான நமது நீண்டகால எதிர்ப்பைப் பாதிக்கிறது. வழக்கமான பயிற்சி படிப்படியாக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும், அதாவது தடுப்பு என்பது கடுமையான மாற்றங்களை விட காலப்போக்கில் தேர்வுகளைச் செய்வது பற்றியது. உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் காலைப் பழக்கவழக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக […]

அண்டார்டிகாவை சுற்றி அமைந்துள்ள தென் கடல், பல தசாப்தங்களாக நமது பூமிக்கு ஒரு முக்கிய காவலனாக இருந்து வந்துள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட அதிகப்படியான வெப்பத்தில் 90%க்கும் மேலானதையும், வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் (CO2) கால் பங்கையும் இந்தக் குளிர்ந்த நீர்ப்பரப்பு தனது ஆழமான அடுக்குகளுக்குள் சேமித்து வைத்துள்ளது. இருப்பினும், விஞ்ஞானிகள் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த அமைப்பு திடீரென உடைந்து, தான் […]

நடைபயிற்சி என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் எளிய, பயனுள்ள மற்றும் பாதுகாப்பான பயிற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால், ‘தினமும் வாக்கிங் சென்றும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே’ என்று நினைப்பவர்களுக்கு, தற்போது உலக அளவில் பிரபலமாகி வரும் 5-4-3-2-1 நடைபயிற்சி பிரமிட் முறை ஒரு சிறந்த தீர்வை வழங்குகிறது. இந்தக் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நுட்பம், உங்கள் நடைபயிற்சிக்குத் தீவிரத்தையும், கட்டமைப்பையும், பன்முகத்தன்மையையும் கூட்டி, கலோரிகளை மிக வேகமாக எரித்து […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]