சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ வடகிழக்கு பருவமழை இயல்பில் இருந்து 5 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.. 4 இடங்களில் அதி கனமழை, 76 இடங்களில் கனமழை பதிவாகி இருகிறது.. குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.. இது 24 மணி நேரத்தில் மண்டலமாக வலுப்பெறும்.. அதற்கடுத்த 48 […]

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகளும் அதிவேகமாக வந்த நிலையில், இந்த கோர விபத்து […]

பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, இன்று தனது 89 வயதில் மறைந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. அவர் மறக்க முடியாத சினிமா வரலாறை மட்டும் அல்ல, கடின உழைப்பில் உருவாக்கிய பெரும் செல்வத்தையும் விட்டுச் சென்றுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலான தனது நீண்டகால திரைப்பட வாழ்க்கையில், சுமார் ரூ.450 கோடி மதிப்புள்ள ஒரு பேரரசை உருவாக்கி உள்ளார்.. மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மொத்த சொத்து […]

பாலிவுட்டின் ஹீ-மேன் என்றும் அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, தனது 89 வயதில் நவம்பர் 24, 2025 இன்று காலமானார். இந்த செய்தியை நடிகரின் குடும்ப செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். ஷோலே நடிகர் இந்த மாத தொடக்கத்தில் 10 நாட்களுக்கும் மேலாக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலை முன்னேறிய நிலையில் , சிகிச்சைக்காக வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தர்மேந்திரா காலமானார் டிசம்பர் 8 ஆம் […]

டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, “சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?” என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் […]