தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரவுப் பணி செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. இரவுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், தங்கள் இயற்கையான உடல் கடிகாரத்திற்கு எதிராக செயல்படுவதால், அவர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் சவாலானது. ஆனால், பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேகப், இரவுப் பணி செய்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வெறும் நான்கு விஷயங்களைப் பின்பற்றினால் போதும் என்று தனது சமூக வலைதளத்தில் எளிமையாக விளக்கியுள்ளார். […]

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் விஷ்வா (20), கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த இளைஞர், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் ஒரு சிறுமியுடன் பழகி, அவரை திருமணம் செய்து கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்வாவுக்கு, புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்துள்ள தானாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் […]

உலகில் எத்தனையோ நச்சுத்தன்மையுள்ள தாவரங்கள் இருந்தாலும், அவற்றில் கள்ளிச்செடி (Spurge) வகையைச் சேர்ந்த ஹிப்போமேன் மான்சினெல்லா (Hippomane Mancinella) எனப்படும் மான்சினீல் (Manchineel) மரமே மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியில் ‘சிறிய ஆப்பிள்’ என்று பொருள்படும் மான்சினெல்லா என்ற சொல்லிலிருந்து இதன் பெயர் வந்தது. ஆப்பிள் போல இருக்கும் ஆபத்து : கரீபியன் பகுதியை தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள் சுமார் 15 மீட்டர் (49 அடி) […]

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொண்டு வரப்பட்டது.. மேலும், அரசு தரப்பில் […]

பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தும் காகிதத்தை உருவாக்க மரங்களை வெட்டுவதாலும், அதிக நீரைப் பயன்படுத்துவதாலும் சுற்றுச்சூழல் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக, ஒரு டன் காகிதம் தயாரிக்க சராசரியாக 24 மரங்கள் வரை வெட்டப்படுகின்றன. மேலும், தரத்தைப் பொறுத்து 10,000 லிட்டர் முதல் 60,000 லிட்டர் வரை தண்ணீர் செலவிடப்படுகிறது. இந்த காகிதங்களை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் கார்பன் வெளியேற்றமும் சுற்றுச்சூழலுக்குப் […]

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் டிச.8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநில செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு என அனைத்துமே கேள்விக்குள்ளாக்குகிற வகையில் தொழிலுறவு […]