“தேச விரோத நடவடிக்கைகளை” ஊக்குவிப்பதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு நிறுவனம் (SIA) இன்று காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் ஜம்மு அலுவலகத்தில் சோதனை நடத்தியது. SIA அதிகாரிகள் செய்தித்தாளின் வளாகத்தில் விரிவான ஆய்வு நடத்தினர், ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் கணினி அமைப்புகளை ஆய்வு செய்தனர். இந்த நடவடிக்கையின் போது, ​​அதிகாரிகள் AK-சீரிஸ் ரைபிள் தோட்டாக்கள், பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்ததாக […]

பீஹார் போலீஸின் அநாகரிகமான நடத்தையை காட்டும் இன்னொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சமீபத்திய வீடியோவில், ஒரு கர்ப்பிணி பெண்ணை போலீஸ் அதிகாரி ஒருவர் ஸ்கூட்டரால் இடித்து, இழுத்துச் செல்கிறார். பட்னாவின் மேரீன் டிரைவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், அந்த பெண் போலீஸைக் நிறுத்த முயன்றும், அவர் ஸ்கூட்டரை முன்னே தள்ளிச் செல்லும் காட்சி தெளிவாக தெரிகிறது. வீடியோவின்படி, அந்தப் பெண் தானே இரு சக்கர வாகனத்தில் […]

உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எதிர்கால கணிப்புகளை மேலும் வலுப்படுத்தி வருகிறார். சமீபத்தில் டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சம்பள திட்டத்தை பெற்றுள்ள அவர் வரவிருக்கும் காலத்தில் “பணம் என்பது விரைவில் அர்த்தமற்றதாக மாறிவிடும்” என்று தெரிவித்தார். அமெரிக்கா-சவுதி முதலீட்டு மன்றம் (US-Saudi Investment Forum) நேற்று வாஷிங்டன் DC-யில் நடைபெற்றபோது, எலான் மஸ்க் சில நிமிடங்கள் […]

கணுக்கால் வீக்கம் என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். சில சந்தர்ப்பங்களில், இது படிப்படியாக உருவாகிறது.. கால்களில் திரவம் குவிதல், தொற்று மற்றும் பிற மருத்துவ நிலைமைகள் இந்த மருத்துவ நிலையை ஏற்படுத்தும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அதன் ஆபத்தை குறைக்கலாம். இருப்பினும், தொடர்ந்து அல்லது கடுமையான வீக்கம் மற்ற உடல்நலப் பிரச்சினைகளையும் குறிக்கலாம். கணுக்கால் வீக்கம் பல நோய்களின் அறிகுறியாகும். இந்தப் பிரச்சினைக்கான […]

நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சமீபத்தில் விசாகப்பட்டினம் சென்றதாக வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது அவர் தனது புதிய படமான அகண்டா 2 படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்தார்.. அப்போது. இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு, நடிகை சம்யுக்தா ஆகியோரும் அவருடன் இருந்தனர். விமான நிலையம் வந்தபோது, அவர்களை வரவேற்க பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடினர். முதலில், ரசிகர்களை சந்தித்து புன்னகையுடன் மலர்கள் வாங்கி மகிழ்ச்சியாக இருந்தார் […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது கள்ள உறவுக்குத் தடையாக இருந்த மகனை, தந்தையே சதி செய்து கொலை செய்துவிட்டு, மகனை மிருகம் தாக்கியதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சௌரப் (30) என்ற இளைஞர் அவரது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சௌரப்பின் உடல் கரும்புத் தோட்டத்தில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டது. சௌரப்பின் தந்தை சுபாஷ் (60), தனது மகனை காட்டு மிருகம் தாக்கியதால்தான் இறந்துவிட்டான் என்று காவல்துறையினரிடம் […]

செயற்கை நுண்ணறிவு அதாவது AI வேலைகளை மட்டுமல்லாமல், பெரிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை (CEO) கூட மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தது என Alphabet Inc. மற்றும் அதன் துணை நிறுவனம் Google-இன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். BBC-க்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், AI எல்லா வேலைகளுக்கும், ஏன் அவரது CEO பதவிக்கும் கூட அச்சுறுத்தலாக இருக்குமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிச்சை, இதை ஒப்புக்கொள்வதுபோல […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயல்வெளியில் ஒரு பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இது பாலியல் வன்கொடுமைக்கு பிறகு நடந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை விசாரணையில் இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியது, ஒரு காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் என்பது அம்பலமாகியுள்ளது. உயிரிழந்தவர் மஹோபா மாவட்டத்தின் கப்ராய் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த […]