Ration Card Update : அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்கள் ரேஷன் அட்டையின் e-KYC செயல்முறையை ஜூன் 30, 2025 க்குள் முடிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் விநியோக முறையை சிறப்பாகவும், வெளிப்படையாகவும் மாற்ற மத்திய அரசு […]
ஒரு நபர் ஆன்லைன் மூலம் “வாவ் மோமோ” உணவகத்தில் இருந்து வெஜ் டார்ஜிலிங் மோமோ காம்போ (Veg Darjeeling Momo Combo) என்ற உணவு ஆர்டர் செய்தார். அவர் ஒரு சைவ உணவு பழக்கம் பின்பற்றும் நபர். தான் ஆர்டர் செய்த சைவ உணவுக்கு பதிலாக சிக்கன் மோமோ (Chicken Momo) வழங்கப்பட்டதால் அவரது மத உணர்வுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். உணவகத்தின் அலட்சியம் காரணமாக, […]
விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்.அதிகாரி அருண்ராஜ், விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணையவுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அதிமுக, திமுக கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தவெகவும் அதற்கு இணையாக இருக்க வேண்டும் என விஜய் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மேலும், பிரபலமாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை தவெகவுக்குள் கொண்டுவர விஜய் முயற்சித்து […]
கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து பிரபல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. பிரபல குழந்தை நல மருத்துவர் டாக்டர் குஷால் அகர்வால் கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், […]
சென்னையில் இன்றைய (ஜூன் 9, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை. சர்வதேச சந்தையில் விலை உயர்வு, […]
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் […]
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதே அக்னிப் பரீட்சையாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் […]
நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. காலையில் நாம் உண்ணும் உணவு கல்லீரலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்போது காலை உணவில் உட்கொள்ளக்கூடாத சில பொருட்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பலர் தங்கள் காலையை தேநீர், பழங்கள் மற்றும் டிஃபினுடன் தொடங்குகிறார்கள். பலர் காலையில் டிபனுக்கு வெள்ளை ரொட்டி சாப்பிடுகிறார்கள். அவர்கள் ரொட்டியுடன் வெண்ணெய் அல்லது ஜாம் சாப்பிடப் பழகிவிட்டார்கள். ஆனால் […]
உலகளவில் மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்பட்டும் வரும் புரவுசராக கூகுள் குரோம் உள்ளது. ஆனால், கூகுள் குரோமில் உள்ள பாதுகாப்பு குறைபாடு காரணமாக உங்கள் கணினியை தாக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூகுள் திரெட் அனலிசிஸ் குரூப் மூலம் இந்த மிகப்பெரிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயனர்களின் அனுமதியின்றி ஹேக்கர்கள் கணினியில் பல தீய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குரோம் புரோசரில் உள்ள வி8 […]
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் அனைவரிடமுமே செல்போன் மற்றும் கணினி பயன்பாடு அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் இளம் தொழில் வல்லுநர்கள் வரை அனைவரும் மணிக்கணக்கில் செல்போனில் தான் நேரத்தை செலவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக, கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மத்தியிலும் செல்போன் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. மூளையில் கட்டியை ஏற்படுத்தும் செல்போன்..? நீண்ட நேர மொபைல் பயன்பாடு மூளைக்கட்டி அபாயத்தை அதிகரிக்குமா..? என்ற கேள்விக்கான பதிலை கண்டறிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. […]