நண்பரின் மனைவியுடன் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படும் தொழிலாளி மீது டாஸ்மாக் பாரில் கல்லால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு வெண்டிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் 26 வயதான கோபிநாத். தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவருக்கு, ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெண்டிபாளையம் […]

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து முக்கிய அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. […]

பல நோய்கள் தீவிரமடைவதற்கு முக்கிய காரணம், அவற்றின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதுதான். எந்த உடல்நலப் பிரச்சினையாக இருந்தாலும், அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து, காரணத்தைக் கண்டறிந்து உரிய சிகிச்சையை மேற்கொண்டால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், சிறிய அறிகுறிகள் என்று நினைத்து பலர் அவற்றைப் புறக்கணிப்பதால், பின்னர் அவை பெரிய உடல்நலப் பிரச்சினைகளாக மாறும் அபாயம் ஏற்படுகிறது. அதேபோல், ஆண்களின் ஹார்மோன் மாற்றங்கள் அல்லது பாலியல் […]

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்துவருபவர் திரிஷா. காலம் மாறினாலும், ரசிகர்களிடையே அவருக்கான வரவேற்பு மட்டும் குறையாமல் இருப்பது அவரது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக அவர் திகழ்கிறார். 40 வயதைக் கடந்த பிறகும் தனது தோற்றம், உடல்தகுதி மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து […]

வாழ்க்கையில் பணத்தைச் சேமிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது அவசியம். ஆனால் இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பலர் உடல்நலத்தைப் புறக்கணித்து, பணம் சம்பாதிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். அதன் விளைவாக, வயது ஆகும்போது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்து, சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியை மருத்துவச் செலவுகளுக்கே செலவிடும் நிலை உருவாகிறது. ஆரோக்கியமாக வாழ பல மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது அதிக செலவு […]

இன்றைய காலத்தில் அறிவியல் வளர்ச்சி மனித வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. அதே நேரத்தில், சில நவீன பழக்கவழக்கங்கள் உடல்நலத்தில் எதிர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, குளிர்சாதனப் பெட்டி (Fridge) பயன்பாடு அதிகரித்த பிறகு, உணவுகளை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து மீண்டும் மீண்டும் சாப்பிடும் பழக்கம் அதிகமாகியுள்ளது. பல வீடுகளில் சமைத்த உணவு மீதமிருந்தால், அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாள் மட்டுமல்ல, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் […]

பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில இயற்கை மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களும் இந்த முயற்சிக்கு துணையாக இருக்கக்கூடும். குறிப்பாக கெமோமில் தேநீர், வெந்தய தேநீர், கற்றாழை சாறு மற்றும் மஞ்சள் பால் போன்றவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றன. கெமோமில் மலரிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் மன அழுத்தத்தைக் குறைத்து, […]

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி அடுத்த திருமுருகப்பட்டினத்தை சேர்ந்தவர் பாலாஜி. கூலித்தொழிலாளியான இவருக்கு 9 வயதான திருமேனிநாதன் (எ) கருப்பன்ஜி என்ற மகன் உள்ளார். சிறுவன், நெடுவாசல் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுவன் வழக்கம் போல் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளான். ஆனால் வெகுநேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தனது உறவினர்களுடன் […]

சமீபகாலங்களில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக குடும்ப உறவுகள் சீர்குலையும் நிலை அதிகரித்து வருகிறது. முன்பு எந்தச் சூழ்நிலையிலும் குடும்பத்தினர் ஒன்றாக இருந்து பிரச்சினைகளை சமாளிக்கும் மனப்பான்மை இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் மன அழுத்தம், பொருளாதார சுமை மற்றும் மனநிலை பாதிப்பு போன்ற காரணங்களால் சிலர் தாங்க முடியாமல் தற்கொலை போன்ற தீவிர முடிவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதிலும் மிகவும் கவலைக்கிடமானது, சில நிகழ்வுகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் […]

புதுடெல்லியில் உள்ள ஜகட்புரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தகீம். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, இவருக்கும், 20 வயதான அலிஷா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று, முஸ்தகீம் இரவு நேரத்தில் உறங்கியபடி உயிரிழந்துவிட்டதாக அலிஷா தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முஸ்தகீம் உறவினர்கள் உடனடியாக முஸ்தகீமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]