கேரள மாநிலம் கொல்லம் கரிக்கோடு பகுதியில், மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த கணவன் தன் மனைவி மீது சமையல் எரிவாயு சிலிண்டரை தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரிக்கோடு பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் (54) மற்றும் அவரது மனைவி கவிதா (46) ஆகியோருக்கு ஒரு மகள் உள்ளார். மதுசூதனனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவம் நடந்த முந்தைய […]

இந்தியப் பெண் ஒருவர் ஷாங்காய் விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அருணாச்சல பிரதேச விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இங்கிலாந்தில் வசிக்கும் பென் வங்க்ஜோம் தொங்க்டொக் என்ற இந்திய பெண், நவம்பர் 21 அன்று லண்டனிலிருந்து ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டபோது, ஷாங்காயில் மூன்று மணி நேர இடைநிறுத்தம் இருந்தது. ஆனால், தனது பாஸ்போர்ட்டில் பிறந்த இடமாக அருணாச்சல் பிரதேசம் குறிப்பிடப்பட்டிருந்ததால், சீன குடிவரவு பணியாளர்கள் […]

மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இன்று காலை 5.30 மணியளவில் இந்த புயல் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் வலுவடையும் எனவும் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.. இதனிடையே குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய […]

சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்பது அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய கனவு. ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, வங்கிக் கடன் மூலம் இந்தக் கனவை நிறைவேற்றுவது எளிதல்ல. இந்த சிரமத்தை குறைக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு தற்போது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – அர்பன் (PMAY-U) 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம், நகர்ப்புறத்தில் வீடு வாங்கத் திட்டமிடும் மக்களுக்குப் பெரிய பொருளாதார […]

தமிழ்நாடு அரசு, சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் உட்பட பலதரப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களின் பொருளாதார வலுவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றில், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை ஊக்குவித்து, அவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டம் தான் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் […]