நாடு தழுவிய “டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்” பிரச்சாரம் 4.0-ன் கீழ், டெல்லியில் பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த ஓய்வூதியதாரர்கள் முகாமை, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். தேசிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC) பிரச்சாரம் 4.0-ன் கீழ் டெல்லியில் பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த மெகா ஓய்வூதியதாரர்கள் முகாமை நேற்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் […]
குழந்தைகள் பெரியவர்களைப் போல அதிகமாக வியர்க்க மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் உங்கள் குழந்தை அதிகமாக வியர்த்தால், அது ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம். நாம் வெயிலில் நீண்ட நேரம் செலவிடும்போதோ அல்லது தீவிரமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போதோ, நமக்கு வியர்க்கத் தொடங்குகிறது. ஆனால் சிறு குழந்தைகளுக்கு ஏன் வியர்க்கவில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் அவர்களை வெயிலில் அழைத்துச் சென்றாலும் சரி அல்லது வேறு எங்காவது சென்றாலும் […]
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் நன்கொடை வசூலிக்க ஆசிரியர்கள், அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் தறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டம், நிறுவனங்கள் சட்டம் பிரிவு 8-ன்கீழ் தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டதாகும். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பங்களிக்க விரும்பும் […]
தமிழ்நாடு அரசு, பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதில், ஏழைப் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம், தற்போது வரை சுமார் 1.14 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு […]
அசைவ விரும்பிகளின் வீடுகளில் முட்டை எப்போதுமே இருக்கும். தினமும் முட்டைகளை பயன்படுத்துவோர் அதிக அளவில் அவற்றை வாங்கிச் சேமித்து வைப்பதால், அவை கெட்டுப்போகாமல் பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல்கள் அவசியம். முட்டைகளை சரியாகச் சேமிக்காவிட்டால், அவை விரைவில் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது. முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது கவனம் : பொதுவாக, முட்டைகளை வாங்கி வந்தவுடன் ஃப்ரிட்ஜில் வைப்பதே சிறந்த முறையாகும். பெரும்பாலான ஃப்ரிட்ஜ்களில் முட்டை வைப்பதற்கான தனி இடம் அமைந்திருக்கும். ஆனால், […]
பீகார் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத் தேர்தல்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், 2025 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறவிருப்பதை அடுத்து பீகார் முழுவதும் 824 பறக்கும் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 2025 நவம்பர் 03 அன்று, பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் […]
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான கிரவுண்ட் ஜீரோ அருகே வசிக்கும் மற்றும் பணிபுரியும் ஆண்களிடையே மார்பகப் புற்றுநோய் பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன. நியூயார்க் போஸ்ட்டில் வெளியான ஒரு அறிக்கையின்படி, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இதுவரை 91 ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோயை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டிற்கானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை 2018 இல் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை விட ஆறு […]
புதிய வீடு அல்லது நிலம் வாங்கும் போதும், கிரகப்பிரவேசத்தின் போதும் வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. வாஸ்து விதிகளைப் பின்பற்றினால், வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவை நிலைக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். திசை, இடம் மற்றும் கட்டுமானம் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்துவது வாழ்க்கையில் நன்மைகளை கொண்டுவரும் என்று ஜோதிட வாஸ்து நிபுணர் பண்டிட் கல்கி ராம் கூறுகிறார். மத […]
கோவையில் 20 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனூங்கோ, தமிழக அரசைக் குற்றம் சாட்டி, “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கங்களுக்கு இன்னும் எத்தனை நிர்பயாக்கள் தேவைப்படும்?” என்று கேள்வி எழுப்பினார். கோயம்புத்தூரில் 20 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் முழு நாட்டையும் […]
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் […]

