சண்டை போடாத தம்பதிகள் இருக்க முடியாது. ஆனால், அந்த சண்டைகளை நீடிக்க விடாமல், உறவில் பிணைப்பையும் நெருக்கத்தையும் அதிகரிப்பதே தாம்பத்தியத்தின் வெற்றி. சின்ன சின்ன ஊடல்கள் உறவுக்கு ருசி சேர்ப்பவைதான் என்றாலும், நீண்ட மௌனமோ அல்லது தவறான வெளிப்பாடுகளோ சிக்கல்களை அதிகரிக்கலாம். சண்டைகளைக் கடந்து கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்க உதவும் சில நடைமுறை வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஈகோவைத் தவிர்த்து சமாதானம் பேசுங்கள் : சண்டை வரும்போது ஈகோ தலைதூக்க […]

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பான டிஎன்ஏ சோதனையில், தாக்குதல் நடத்தியவர் காஷ்மீர் மருத்துவர் உமர் உன் நபி என்பது தெரியவந்தது, அவர் ஜெய்ஷ்-இ-முகமதுவின் தளவாடப் பிரிவுடன் தொடர்புடையவர். நவம்பர் 10 ஆம் தேதி டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த மிகப்பெரிய கார் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், குண்டுவெடிப்பில் […]

உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத காப்பீட்டை வழங்குவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உட்பட தகுதியான ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.20,000 கோடி வரை கூடுதல் கடன் வசதிகளை வழங்க முடியும். செயல்படுத்தல் உத்தி மற்றும் இலக்குகள்:குறு, சிறு […]

தஞ்சாவூர் அருகே கோயில் விழாவிற்கு வந்த உறவுக்கார சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்கண்ணன் (24). இவர், தஞ்சாவூர் அருகே நடைபெற்ற கோயில் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அதேபோல, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியும் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி […]

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள கணக்குப்படி, 2020-ஆம் ஆண்டு மட்டும் புற்றுநோய்க்கு 1 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் மரணத்துக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக புற்றுநோய் விளங்குகிறது. இப்படியான ஒரு அபாயகரமான சூழலில், எந்தெந்த நாடுகளில் புற்றுநோய் விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். மேம்பட்ட ஸ்கிரீனிங் அமைப்புகள், வயதான மக்கள் தொகை மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற காரணங்களால் பல வளர்ந்த நாடுகளில் […]

ஆரோக்கியம் கெட்டுப் போவதற்குக் காரணமாக அமையும் பல காரணிகளில், நாள்பட்ட மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நார்ச்சத்து இல்லாத உணவுகள், போதிய நீர் அருந்தாமை மற்றும் சிரமப்பட்டு மலம் கழித்தல் போன்ற பழக்கங்களே இதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இந்தப் பிரச்சனைக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் மூல நோய், மலக்குடல் இறக்கம் போன்ற கோளாறுகள் உருவாக வாய்ப்புள்ளது. மலச்சிக்கலுக்கான தீர்வுகளை ஆராய்ந்த பிரிட்டிஷ் டயடெட்டிக் அஸோஸியேஷனைச் (BDA) சேர்ந்த […]

12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை […]

குளிர் காலம் வந்தாலே சருமம் பயங்கர டல்லாகி விடும். வறட்சி, சுருக்கம் இதன்கூடவே சேர்ந்து முகம், கை எல்லாம் கருக்கவும் ஆரம்பிக்கும். முகம் களையிழந்து இருக்கும். இதற்கு காரணம் சருமத்திற்கு அடியில் இருக்கும் எண்ணெய் சுரப்பி சரியாக வேலை செய்யாமல் உறைந்துவிடுவதால்தான். சருமத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் உங்களை வெளிப்புற மாசு மற்றும் கதிர்களிடமிருந்து காப்பாற்றுவதால் சருமம் எந்தவித பாதுக்களுமின்றி இருக்கிறது. ஆனால் போதிய அளவு எண்ணெய் சுரக்கப்படாமலிருந்தால், சருமம் வறண்டு, […]

மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம், பூமா தேவியை அபகரித்து கடலுக்கடியில் மறைத்து வைத்த இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து உலகை மீட்கப் பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரமாகும். ஆயிரம் ஆண்டுகள் நீடித்த போருக்குப் பிறகு, அசுரனை வென்று பூமாதேவியைக் காத்த வராகப் பெருமான், நாடு முழுவதும் பல கோயில்களில் அருள்பாலித்தாலும், திருமலை திருப்பதியில் உள்ள வராகப் பெருமாளின் கோயில் மிகவும் விசேஷமானது. திருமலை திருப்பதி திருத்தலம் ஆதியில் வராகத் தலமாகவே […]