காலையில் சோம்பலை விரட்ட, மாலை நேரத்தில் புத்துணர்ச்சி பெற, ஏன்… சாதாரணமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்க கூட தேநீரை கையில் எடுக்கும் பழக்கம் இன்று பலருக்கும் நிரந்தரமாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் மது அருந்துபவர்களை விட டீக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. ஆனால், கட்டுப்பாடு இல்லாமல் தேநீர் அருந்துவது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்றும், குறிப்பாக டீ குடிக்கும் நேரத்தைச் சுற்றியுள்ள நீர் அருந்தும் பழக்கம் குறித்துப் பலருக்கும் குழப்பம் நிலவுவதாகவும் […]

செயற்கை நுண்ணறிவு (AI) நம் வாழ்க்கையில் நாளுக்கு நாள் பெரும் பங்கை வகிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு ஆபத்துகள் குறித்து அச்சங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், Palisade Research வெளியிட்ட ஒரு அறிக்கையில் — பல முன்னேற்றமான AI மாடல்கள் தங்களை நிறுத்த முயன்றபோதும் அதனை எதிர்த்து செயல்பட்டதுடன், முடக்குவதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளையே சில நேரங்களில் தாமே சிதைத்தன […]

உடற்பயிற்சிகளில் மிக எளிமையானதும், எந்த உபகரணங்களும் தேவைப்படாததுமான ஒரு முதலீடு எதுவென்றால், அது நடைப்பயிற்சிதான். கண்ணை மூடி கண் விழிக்கும் நேரத்தை மட்டும் முதலீடு செய்தால் போதும். மனநலன் தொடங்கி இதய நலன் வரை அத்தனை நன்மைகளையும் அள்ளித் தரும் அருமருந்தாக இது செயல்படும். நடைப்பயிற்சியை ஒரு கலை போலப் பார்க்க வேண்டும். வயதுக்கு ஏற்றவாறு சீரான கால அளவுடன் அதை மேற்கொள்வது நீண்ட கால ஆரோக்கியத்துக்கு மிகவும் அத்தியாவசியம் […]

இப்போதெல்லாம், வயதைப் பொருட்படுத்தாமல் பலர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் பலருக்கு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பல்வேறு உணவுமுறைகளோ அல்லது தீவிர வாழ்க்கை முறை மாற்றங்களோ தேவையில்லை. சில சிறிய மாற்றங்கள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. நார்ச்சத்து உணவுகள்: நார்ச்சத்து, குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து, இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இது செரிமான மண்டலத்தில் கொழுப்பை பிணைக்கிறது, இரத்தத்தில் நுழைவதைத் தடுக்கிறது. […]

இந்திய நிதி அமைப்பில் வெளிப்படைத்தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு, மற்றும் அமைப்புரீதியான பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய ரிசர்வ் வங்கி தனது மிகப்பெரிய சீர்திருத்த முன்மொழிவுகளில் ஒன்றான வரைவு 238-ஐ வெளியிட்டுள்ளது. கடன் வழங்குதல், EMI விதிமுறைகள், கிரெடிட் கார்டு விதிமுறைகள் மற்றும் வங்கி சேமிப்பு நடைமுறைகள் எனப் பல முக்கிய அம்சங்களில் இது மாற்றங்களை கொண்டுவர உள்ளது. நுகர்வோரைப் பாதுகாக்கும் புதிய விதிகள் : பொதுமக்கள் கருத்துகளுக்காக நவம்பர் 10ஆம் […]

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மோன்தா புயலாக மாறியது.. சென்னைக்கு 560 கி.மீ வேகத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் காக்கிநாடாவுக்கு 620 கி.மீ, தெற்கு தென் கிழக்கிலும், விசாகப்பட்டினத்திற்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.. இந்த புயல் கடந்த 6 மணி நேரமாக 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.. முன்னதாக 16 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது புயலின் வேகம் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]