ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதிப்பது எளிதான முடிவு அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். ஃபாக்ஸ் நியூஸுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், “இந்தியா ரஷ்யாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தது. இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் நான் அதன் மீது 50% வரி விதித்தேன். இது மிகப் பெரிய படியாகும், […]
முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றும் ஆம்லெட் நன்மை பயக்கும் என்றும் கருதப்படுகிறது. இரண்டில் எது சிறந்தது, எது எடையைக் குறைக்க உதவுகிறது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். முட்டை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் விருப்பமான காலை உணவுப் பொருளாகும். சிலர் அதை பஞ்சுபோன்ற ஆம்லெட் வடிவில் சாப்பிட விரும்புகிறார்கள், மற்றவர்கள் அதை வேகவைத்த முட்டையாக சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் எடை இழப்பு மற்றும் ஆரோக்கியமான உணவைப் பொறுத்தவரை, […]
100 நாள் வேலை திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது 150 நாள்கள், வேலை தரப்போவது 20 நாள்கள் தான் தரப்படுகிறது. திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? என அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில் ஃ; தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இதுவரை […]
இயற்கையாகவே குளிர்ச்சி தரும் ஒரு பானம் தான் இளநீர். இது தாகத்தைத் தணிப்பதுடன், உடலுக்கும் பல நன்மைகளை அளிக்கிறது. எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம், சோடியம், மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், இது ‘இயற்கையான ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்’ என்று அழைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் அதிகமாக வியர்க்கும் நபர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. அதுவும் கோடை காலங்களில் இளநீருக்கு மவுசு அதிகம். இளநீரின் […]
போதைப் பொருள் நடமாட்டத்தை, தமிழ்நாடு காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக ஆட்சியில்தான் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், ஏதாவது ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டதா? திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி […]
‘இரிடியம் மோசடி’ தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, நெல்லை உட்பட 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடமிருந்து போலியான இரிடியம் ஆவணங்கள், லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி கும்பல், ‘இரிடியம் விற்பனை மூலம் […]
உக்ரைனுடனான அமைதிப்பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமைதி பேச்சுக்கு ஐரோப்பிய நாடுகள் தடையாக உள்ளது என, ரஷ்ய அதிபர் புடின் குற்றஞ்சாட்டினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், மூன்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புடின், ‘உக்ரைன் உடனான போரை […]
“ஊழல் இல்லாததாக” நாடாக மாற்றுவதற்காக அல்பேனிய பிரதமர் எடி ராமா தனது அமைச்சரவையில் டிஜிட்டல் அமைச்சரை நியமனம் செய்து அறிவித்துள்ளார். அல்பேனியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. இதன் வாயிலாக தொடர்ந்து நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக எடி ரமா பொறுப்பேற்றார். இந்நிலையில் சோஷலிஸ்ட் கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, ஏஐ அமைச்சருக்கான அறிவிப்பை பிரதமர் எடி ரமா வெளியிட்டார். ஐ தொழில்நுட்பத்தின் […]
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை மீண்டும் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வந்த அவர், திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “திமுக அரசு கேபிள் டிவி […]
ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என சொல்லப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும். தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது. அரசின் பல்வேறு […]

