தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ”மேற்கு விதர்பா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல […]

2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், சாஹிப்சாதா ஃபர்ஹான் 57 ரன்களும், ஃபகர் ஜமான் 46 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தது. இருப்பினும், பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் முற்றிலும் சரிந்து, […]

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வாசுதேவன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமாரி. இவர் தெரிந்தவர்களுக்கு மட்டும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் கொண்டிருந்தார். அந்த வகையில், அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவருக்கு ரூ.2 லட்சம் வட்டிக்கு கொடுத்திருந்தார். ஆனால், சம்பத் பணத்தை திரும்பக் கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்த நிலையில், காலதாமதமாக சிறுக சிறுக அசல் தொகையை மட்டும் முழுமையாக கட்டி முடித்துள்ளார். அசல் தொகையைப் பெற்ற […]

பீகார் மாநிலத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலை தொடர்வதற்காக, தனது கணவனான மருத்துவரை அவரது மனைவியே கழுத்தறுத்துக் கொலை செய்திருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முராரி என்ற மருத்துவருக்கு திருமணமாகி, குமாரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், மருத்துவர் முராரியின் உடல், அப்பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த […]

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம், சோழர் நாடு ஊராட்சிப் பகுதியில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் பள்ளிக்குழிப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55). விவசாயியான இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், செல்வராஜின் வீட்டுக்கு இவர்களது உறவினர் காசி துரைசாமி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, துரைசாமிக்கும் செல்வராஜின் […]