நடைபயிற்சி என்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் மிக எளிமையான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சியாகும். தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது, உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இது உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களை தடுக்க உதவுகிறது. உடல் எடை குறைப்பு : காலையில் நடப்பது கலோரிகளை எரித்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த […]
வடமேற்கு வெனிசுலாவில் நேற்று (புதன்கிழமை) 6.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப் புள்ளி, சுலியா மாநிலத்தில் உள்ள மேனே கிராண்டே (Mene Grande) என்ற பகுதியின் கிழக்கு-வடகிழக்கு திசையில் 15 மைல்கள் (24 கிலோமீட்டர்கள்) தொலைவில் அமைந்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தலைநகர் கரக்காஸிலிருந்து 370 மைல்கள் (600 கிலோமீட்டர்கள்) மேற்குப் பகுதியில் உள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 […]
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோனாபட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு, அதற்கான ஆணைகளை மக்களிடமே நேரடியாக வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்பது மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக பல அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது. ஒரே […]
வேகமாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சத்தைத் தாண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சமீபத்திய நாட்களில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து, சாதனை அளவை எட்டியுள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் அதிக வரிகள் உள்ளிட்ட பல காரணிகள் இதற்கு பங்களித்துள்ளன. இந்த காரணிகள் அனைத்தும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தை முதலீட்டாளர்களிடையே பெருகிய முறையில் […]
ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: சேலம் மாவட்டத்தில், ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை […]
உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, உலகளவில் சுமார் 1.4 பில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவலையான விஷயம் என்னவென்றால், இந்த நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது, மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை அல்லது தங்களுக்கு இந்த நிலை இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். WHO […]
வீட்டில் வாஸ்து சரியாக அமையவில்லை என்றால் கஷ்டம் வரும் என்று பலரும் நம்புகின்றனர். அப்படிப்பட்ட சூழலில், வீட்டில் சிலர் குபேரர் சிலையை வைப்பார்கள். ‘சிரிக்கும் புத்தர்’ என்று அழைக்கப்படும் இந்த சிலை, மகிழ்ச்சியின் சின்னமாக அறியப்படுகிறது. இது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் தருவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். குபேரர் எப்போதும் பண மூட்டையுடன் இருப்பதால், இந்த சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் செல்வம் பெருகும் என்றும், நமது […]
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் விவரங்களை சரிசெய்ய வேண்டுமென தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் மார்ச் – ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் எமிஸ் […]
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசிய கோப்பை தொடர் ட்துபாயில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இந்த சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் நேற்று […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு புனித தலம். இங்கு, பக்தர்களுக்கு வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி, ஒரு சாதாரண பிரசாதமாக மட்டுமல்லாமல், தெய்வீக சக்தியுடன் கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது. சிவபெருமானின் புனித சின்னமாக விபூதி கருதப்பட்டாலும், திருச்செந்தூரில் அது பன்னீர் இலையில் வழங்கப்படுவதால், அதற்கு தனிச் சிறப்பு உண்டு. இதன் பின்னணி குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். சுமார் […]

