ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டனாக ரிக்கி பாண்டிங் உள்ளார். முதல் ஏழு பேர் பட்டியலில் இரண்டு இந்திய ஜாம்பவான்களும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இருப்பினும், மற்றொரு புகழ்பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரும் முதல் 7 பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற […]

கமல்ஹாசனின் நடுநிலையான பேச்சு, உங்களைப் போன்ற என்டெர்டெய்னர்களுக்கு புரியாது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப் பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளை தரம் பார்க்காமல் எல்லோர் மீதும் கொட்டுவதும் வழக்கமாக கொண்ட பிஜேபியாலேயே புறக்கணிக்கப்பட்ட அண்ணாமலை இன்று எங்கள் தலைவரைப் பற்றி, […]

போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காவேரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்குப் பின் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் முறையாக கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல் மணிகளுடன் பல நாட்கள் வெயிலிலும், மழையிலும் […]

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) டிஜிட்டல் கட்டண முறையில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. இந்த மாற்றத்தின் கீழ், இன்று (அக்டோபர் 8) முதல் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) பயன்படுத்தும் போது முக அங்கீகாரம் மற்றும் கைரேகை அங்கீகாரம் அனுமதிக்கப்படும். இதன் பொருள் நிதி பரிவர்த்தனைகளுக்கு பின்களுடன் கூடுதலாக முகம் மற்றும் கைரேகை அங்கீகாரம் இப்போது பயன்படுத்தப்படும். உங்கள் பயோமெட்ரிக் தரவு ஆதார் அமைப்புடன் இணைக்கப்பட்ட தரவுகளுடன் […]

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் 18 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பாறைகள் விழுந்தது. இதனால் மண்ணுக்குள் பேருந்து புதைந்தது. இதில் பயணித்த 18 […]

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ரஷ்யத் தலைவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ​​இரு தலைவர்களும் இந்தியா-ரஷ்யா இருதரப்பு நிகழ்ச்சி நிரலின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தனர், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் […]

பூமியின் 77 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பரந்த பெருங்கடல்களில் எண்ணற்ற பொக்கிஷங்கள் மறைந்துள்ளன. ஆனால் அவற்றைப் பிரித்தெடுப்பது எளிதல்ல. கடலில் சுமார் 20 மில்லியன் டன் தங்கம் (Underwater gold) இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். நாடுகள் இந்தப் புதையலைப் பிரித்தெடுக்க முயற்சி செய்கின்றன. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடல் அடிவாரத்தில் பரந்த பகுதிகளில் தங்கம் சிதறிக்கிடக்கிறது. இது மற்ற கனிமங்கள் மற்றும் படிவுகளுடன் கலக்கப்படுகிறது. […]