தூக்கம் உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். உணவுமுறை முதல் உடல் செயல்பாடு, மன அழுத்தம் மற்றும் பலவற்றில் உங்கள் தூக்கத்தைப் பாதிக்கக்கூடிய பல காரணிகள் உள்ளன. இருப்பினும், நீங்கள் நன்றாக தூங்க விரும்பினால், உங்களுக்கு இந்த மசாலா மட்டுமே தேவைப்படும். ஜாதிக்காய் உங்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவும். ஆனால் அதிக அளவில் ஜாதிக்காய் சாப்பிடக் கூடாது. ஒரு நாளுக்கு அதிகபட்சம் 1/8 தேக்கரண்டி போதுமானது. அதிகமாக […]

விவசாய மின் இணைப்பு திட்டங்களை பொருத்தவரை சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23.09.2021 அன்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு 1,00,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்கள். […]

பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை 2025 டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீடித்துள்ளது. இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி அதிக அளவு கிடைப்பதற்காக பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு 2025 ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை தற்காலிகமாக விலக்கு அளித்திருந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதலாக ஆதரவு அளிக்க தற்போது 2025 செப்டம்பர் 30 முதல் டிசம்பர் 31 வரை பருத்தி மீதான (எச் எஸ் 5201) […]

வரி போர்களுக்கு மத்தியில், ரஷ்யாவிற்கும் – இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று அதிபர் மாளிகை கிரெம்ளின் உறுதிப்படுத்தியது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து […]

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சத்தீஸ்கரில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு […]

பாகிஸ்தான் முழுவதும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், வாகா-அட்டாரி எல்லையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடையே எதிர்வினையை தூண்டியுள்ளது. சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோவில், வாகா எல்லையில் இந்தியா–பாகிஸ்தான் இடையே நடக்கும் தினசரி தேசிய கொடி இறக்கும் விழாவின் போது, பாகிஸ்தான் பக்கம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. ஆனால் இந்தியா பக்கம் நன்கு சுத்தமாகவும், அமைதியாகவும் காணப்பட்டது. இதைக் கண்ட நெட்டிசன்கள் […]

மோசமான விளம்பர மாடல் போட்டோ ஷூட் ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். ஜெயலலிதா மாடல் ஆட்சியை அரியணையில் ஏற்றுவோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் எனது எழுச்சிப் பயணத்தை கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கி, இதுவரை 118 தொகுதிகளில் சுமார் 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். இந்தப் பயணத்தின்போது சுமார் […]

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான லலித் மோடி இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைவதைக் காணலாம். இந்த வீடியோ 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் சீசனில் எடுக்கப்பட்டது, அப்போது மும்பை இந்தியன்ஸைச் சேர்ந்த ஹர்பஜன் சிங்கும் கிங்ஸ் லெவன் […]

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும், 2 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், […]

கருட புராணம் இந்து மதத்தின் 18 மிக முக்கியமான மகாபுராணங்களில் ஒன்றாகும். இந்த புராணம் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பயணத்தையும், மறுமை வாழ்க்கையையும் விரிவாக விவரிக்கிறது. கருட புராணத்தில் பாவங்கள், புண்ணியங்கள், சொர்க்கம், நரகம் மற்றும் இரட்சிப்பு பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன. குறிப்பாக, கருட புராணம், ஒருவர் தனது வாழ்க்கையில் செய்யும் பாவங்களுக்கு மரணத்திற்குப் பிறகு என்ன தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை தெளிவாக விளக்குகிறது. […]