புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தை கௌரவிக்கும் வகையில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி, இந்தியா தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடுகிறது. இந்த நாள் அவரது சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், அன்றாட வாழ்வில் விளையாட்டு மற்றும் உடற்தகுதியின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு தினம் முதன்முதலில் 2012 இல் கொண்டாடப்பட்டது. இந்த தேதி, ஆகஸ்ட் 29, 1905 ஆம் ஆண்டு பிறந்த மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த […]

இளைஞர்களும், பெண்களும் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்குடன், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு தொழில் பயிற்சி மற்றும் ஊக்கத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இப்போது சென்னையில் நடத்தப்படவுள்ள பயிற்சி நிகழ்வு, ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகளைக் உருவாக்கியுள்ளது. சென்னையில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த 3 நாள் பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி […]

உள்ளூர் ஜவுளித் தொழில் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை பருத்தி இறக்குமதி வரி விலக்கு கால அவகாசத்தை நீட்டித்த மத்திய நிதி அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு திருப்பூர் தொழில் வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. “இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா திடீரென 50% என்ற அசாதாரண சுங்க வரியை விதித்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜவுளி தொழில்துறைக்கு, இந்த நீட்டிப்பு சரியான நேரத்தில் […]

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவரும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால், தற்போது தனது 35-வது திரைப்படமான ‘மகுடம்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ரவி அரசின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இப்படத்தை விட அதிக பேசப்பட்டு வந்தது விஷாலின் திருமணம் தான். நீண்ட நாட்களாகவே, “விஷால் எப்போது திருமணம் செய்யப் போகிறார்?” என்ற கேள்வி திரை உலகிலும், […]

இந்திய அணி நட்சத்திர தொடக்க வீரரும் டெஸ்ட் கேப்டனுமான சுப்மன் கில் எதிர்பாராத வைரஸ் காய்ச்சல் காரணமாக துலீப் டிராபியிலிருந்து விலகியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு அவர்கள் இருவர் உட்பட 15 பேர் கொண்ட அணி வீரர்களின் […]

பிரதமரின் ஸ்வநிதி திட்ட மறுசீரமைப்பு மற்றும் கடன் கால நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் (பிரதமரின் ஸ்வநிதி) திட்டத்தில், 31.12.2024-க்குப் பிறகும் கடன் காலத்தை மறுசீரமைத்து 2030 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு 7,332 கோடி ரூபாய். மறுசீரமைக்கப்பட்ட இந்தத் திட்டம் 50 லட்சம் புதிய பயனாளிகள் உட்பட 1.15 […]

இன்றைய டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அதன் பாதுகாப்பும் முக்கியமானது. பெரும்பாலான பணப்புழக்கங்களும், ஆவணப் பரிமாற்றங்களும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூழலில், இ-மெயில் சேவைகளின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் கூகுளின் ஜிமெயில் சேவைக்கு சமீபத்தில் ஹேக்கிங் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அனைத்து ஜிமெயில் பயனர்களும் தங்களது கணக்குகளின் […]

இங்கிலாந்து முழுவதும் குறைந்தது 85 இடங்களில் “கும்பல் அடிப்படையிலான குழந்தைகள் பாலியல் சுரண்டல்” சம்பவம் அரங்கேறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த கும்பல் பாகிஸ்தானை சேர்ந்தது என்றும் அந்நாட்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ், தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் “grooming gangs” என்ற விசாரணையின் ஒருபகுதியாக, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த “பாலியல் கும்பல்கள்”, […]