கணவன் எவ்வளவு தான் துன்புறுத்தினாலும் மனைவி சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை என்ற ஒரு முறையை பழக்கப்பட்டுத்தி விட்டனர். அதன் விளைவாக பஞ்சாப் மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி , 2 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மீது கணவர் பெற்றோர் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் சேர்ந்த பரம்ஜித் கவுர் என்ற பெண் தன் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது 2 குழந்தைகளுடன் , பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாத காலமாக வசித்து வந்தார். இதையடுத்து அவரது கணவர் குல்தீப் சிங் (30 வயது) , மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு வற்புறுத்தி மனைவி வந்துள்ளார் .
அவருடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவரையும் அவரது பிள்ளைகளையும் துன்புறுத்தியுள்ளார் குல்தீப் சிங். அதனால், தன்னையும், குழந்தைகளையும் துன்புறுத்திய உங்களுடன் என்னால் வர முடியாது என்று மனைவி கூறியுள்ளார் .
இதனால் ஆத்திரமடைந்த கணவர் நேற்று முன்தினம் இரவு 2 பேருடன் சேர்ந்து பரம்ஜித் கவுர் வசித்த வீட்டிற்கு சென்று , அங்கு உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட அனைவரின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளனர் .