கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ், “நடிகர் விஜய் சேதுபதி எதை குறித்து அந்தக் கருத்தைச் சொன்னார் என்பது தெரியவில்லை. தனியார் தொலைக்காட்சி அதுகுறித்து விளக்கம் அளித்திருந்தது. இருந்தாலும், போலியான பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சி செய்தவர்கள் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்கள். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் குறித்து பேசிய அமைச்சர், “மதுபானங்கள் வாங்குவதில் எந்தவிதமான பாரபட்சமும் கிடையாது. குறிப்பிட்ட திமுகவினர் நடத்தும் 3 நிறுவனங்களில் மட்டும் மதுபானங்கள் வாங்கப்படுவதில்லை. 11 நிறுவனங்களின் மதுபானங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும்” என்றார்.
மேலும், “டாஸ்மாக் நிர்வாகத்தில் முறைகேடுகள் இருப்பதாக கூறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், FL-1, FL-2 மதுபானங்கள் தொடர்பாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாகம் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இனி வரும் டாஸ்மாக் பார் டெண்டரில் உணவுக்கூடங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். இன்னும் ஒரு மாதத்தில் டெண்டர் நடக்கும்” என்றார்.



