தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சென்னை மாநகராட்சி 3-வது மண்டலம் கொசப்பேட்டை பகுதியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.. பின்னர் முதல் கட்டமாக 9 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி “ நவீன வசதிகளுடன் இந்த திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.. தனியார் மண்டபமாக இருந்தால் லட்சக்கணக்கில் வாடகை வசூலித்திருப்பார்கள்.. ஆனால் ஏழை எளிய நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது..
பொதுவாக திருமண விழாக்களில், மணமக்களை வாழ்த்தி பேசும் போது மணமக்கள் எப்படி வாழ் வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.. கலைஞரும் தமிழும் போல வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள்… முதல்வரும், உழைப்பும் போல வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.. நான் மணமக்கள் எப்படி வாழக்கூடாத் என்பதற்கு உதாரணம் சொல்கிறேன்..
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று உங்கள் அத்தனை பேருக்கும்தெரியும்.. தயவு செய்து எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வாம் மாதிரி வாழ்ந்து விடாதீர்கள்.. சுய மரியாதையை விட்டு கொடுத்து விடாதீங்க.. உங்களுக்கு என்ன வேண்டுமே கேட்டு பெற்று விடுங்கள்..
சட்டமன்றத்தில் நான் பேசியது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தவறுதலாக எனது காரில் ஏற முயன்றனர்.. என்னுடைய கார் தான் தாராளமாக எடுத்து செல்லுங்கள்.. நான் எதுவும் நினைக்கமாட்டேன்.. ஆனால் கமலாலயத்திற்கு மட்டும் சென்றுவிடாதீர்கள் என்று சொன்னேன்.. ஆனால் 2 பேரும் போட்டிப் போட்டுக்கொண்டு கமலாலயம் சென்று இருக்கிறார்கள்.. கேடுகெட்ட வெட்கம் இல்லாத எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது.. இதற்கு மேல் அவர்களை பற்றி பேச விரும்பவில்லை..” என்று தெரிவித்தார்..