திமுகவின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் சென்னை மெரினாவில் இருக்கின்ற அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தன்னுடைய தந்தையும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, முயற்சி, முயற்சி, முயற்சி அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், முதலமைச்சருக்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதள பதிவில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துவதாக பதிவிட்டிருக்கிறார்.
இதே போல 70 வது பிறந்தநாள் காணும் முதலமைச்சரின் ஸ்டாலின் மிக நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்திருக்கிறார். தெலுங்கானாவின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை போன்ற பல்வேறு அரசியல் தலைவர்களும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.