முதலமைச்சரின் 70வது பிறந்த நாள்…..! வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திரமோடி…..!

திமுகவின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் சென்னை மெரினாவில் இருக்கின்ற அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தன்னுடைய தந்தையும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, முயற்சி, முயற்சி, முயற்சி அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், முதலமைச்சருக்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதள பதிவில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துவதாக பதிவிட்டிருக்கிறார்.

இதே போல 70 வது பிறந்தநாள் காணும் முதலமைச்சரின் ஸ்டாலின் மிக நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்திருக்கிறார். தெலுங்கானாவின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை போன்ற பல்வேறு அரசியல் தலைவர்களும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Next Post

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை……!

Wed Mar 1 , 2023
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மழைக்காலம் முடிவடைந்து பனிக்காலம் தொடர்ந்தது. இந்த பனிக்காலம் தற்போது வரையில் நீடித்து வருகிறது. ஆனாலும் அப்போது தமிழகத்தில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நெற்ப்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த சமயத்தில் மழை பெய்ததன் காரணமாக, விவசாயிகள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். […]
தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம்..!! மேலிடமே சொல்லிருச்சு..!! வெளுத்து வாங்குமாம்..!! கவனமா இருங்க..!!

You May Like