#திருப்பூர்: தனியாக இருந்த பள்ளி மாணவியிடம் பாதிரியார் பாலியல் வன்கொடுமை..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரோஸ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து விடுதி நடத்தி வருகின்றார்.


இந்த விடுதியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் தங்கி இருந்ததாக சொல்லப்படுகின்றது.

இந்த விடுதியில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பிரார்த்தனை நடைபெறும். இந்த நிலையில் விடுதியில் வீரபாண்டியைச் சேர்ந்த தம்பதியினர் தனது 14 வயது மகள் மற்றும் 13 வயது மகன் உள்ளிட்டோரை விடுதியில் தங்க வைத்துள்ளனர். 

இந்த நிலையில் சென்ற வாரம் கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது 14 வயது மகள் விடுதி காப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். 

அந்த புகாரில் பாதிரியார் சென்ற 15 நாட்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாததால் மாலையில் பிரார்த்தனைக்கு செல்லாமல் இருந்த தனது மகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன் வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டி இருக்கின்றார்.

ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்கள். பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

1newsnationuser5

Next Post

#திருப்பூர்: திருமணம் செய்து கொள்ள கூறிய காதலியை உயிருடன் எரித்துக் கொன்ற காதலன்..!

Thu Jan 5 , 2023
திருப்பூர் மாவட்டம் பல்லடம்-பேத்தாம்பாளையம் சாலையில் பனைபாளையம் பகுதியில் இன்று மாலை உடலில் தீக்காயங்களுடன் இளம்பெண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.  சிறுமி ராயர்பாளையம் […]
குடியிருப்பு பகுதியில் மனித எலும்புக் கூடு..!! மிரண்டுபோன மக்கள்..!! நடந்தது என்ன..? திகில் சம்பவம்..!!

You May Like