ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் டிராக்டர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற நபர் கடந்த 10 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய திருவலம் காவல்துறையினரின் விசாரணையில், தற்கொலை செய்வதற்கு முன்பாக மோகன் தன்னுடைய கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினார்கள்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தெரிவித்து இருப்பதாவது, தன்னுடைய தொழிற்சாலையில் பணியாற்றும் தன்னுடைய உயர் அதிகாரிகளான ராஜீவன், பாலா, பிரசன்னகுல்கர்னி போன்றோர் தன்னை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும், தன்னுடைய தற்கொலைக்கு அவர்கள் 3 பேரும் தான் காரணம் என எழுதி வைத்திருந்தார்.
ஆகவே தொழிலாளியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த உயர் அதிகாரிகள் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து, தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளர்கள் எல்லோரும் வீட்டிற்கு செல்லாமல் கருப்புக்கொடி ஏந்தி இரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தினர்.
தொழிலாளியின் மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக, சக தொழிலாளர்கள் சுமார் 200க்கும் அதிகமானோர் அமைதியான முறையில் தர்ணா போராட்டம் காரணமாக தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே சற்றே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது