தலைநகர் சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் வீட்டில் உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது சென்ற ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் 34 விபச்சார வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 94 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விபச்சாரத்தில் பெண்களை தள்ளி கொடுமைப்படுத்திய 55 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விபச்சார குற்றங்களுக்கு வழிவகை செய்யும் லோகண்டோ என்ற செயலி மற்றும் ஜஸ்ட் டயல் விவா ஸ்ட்ரீட் ஆப் உள்ளிட்ட இணையதளங்களை முடக்கவும் சைபர் கிரைம் காவல்துறையினர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது