சென்னையில் சட்ட விரோதமாக விபச்சார தொழில் செய்த 55 பேர் அதிரடி கைது…..! 94 பெண்கள் மீட்பு காவல்துறையினர் வெளியிட்ட தகவல்….!

தலைநகர் சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் வீட்டில் உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது சென்ற ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் 34 விபச்சார வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 94 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, விபச்சாரத்தில் பெண்களை தள்ளி கொடுமைப்படுத்திய 55 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல விபச்சார குற்றங்களுக்கு வழிவகை செய்யும் லோகண்டோ என்ற செயலி மற்றும் ஜஸ்ட் டயல் விவா ஸ்ட்ரீட் ஆப் உள்ளிட்ட இணையதளங்களை முடக்கவும் சைபர் கிரைம் காவல்துறையினர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Next Post

இளைஞர்களே இது உங்களுக்கான செய்தி தான்…..! சென்னையில் நாளை நடைபெறுகிறது மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மிஸ் பண்ணிடாதீங்க…..!

Thu May 18 , 2023
தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும் ஒன்றிணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன என்று கூறப்பட்டுள்ளது. சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் இருக்கின்ற வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இந்த […]
jobfair

You May Like